Monday, August 30, 2010

கண்ணீராய்…

கடல் மணல்
கோபுரமாய் நினைவினைக்
குவித்துவிட்டாள்
நெஞ்சின் அலைஅடித்துக் கரைக்க
நினைத்து நினைத்துக் கரைந்து
போணேன் கண்ணீராய்…

Saturday, August 7, 2010

பளுவான பழுதுகள்

உன் எண்ணும் என் எண்ணும்
இன்னும் இருவரும்
பகிராத போதும் ...
உன் அழைப்பு வந்துள்ளதா
என பார்த்து பார்த்தே
என் கைபேசியின் பொத்தான்கள்
தேய்ந்து ஓய்ந்து போனதடி ...

அமிழ்த்தும்

பிரிவென்னும் வார்த்தை
நம்மோடு இருந்தால்
உயிரெனும் புணையும்
துளை ஒன்று இன்றி
தினம் தினம் முழுகும் ...

நெஞ்சோடு

ஊசியும் இல்ல நூலும் இல்ல
எப்படியோ அவள மட்டும்
எந்தன் நெஞ்சில் வச்சு
நானே தச்சு கிட்டேனே ...

தொடருது

எழுத்தாகத் தொடங்கிய
என் காதல் ...
வார்த்தையாக வரியாக
பக்கமாக நூலாக நூலகமாக
தொடருது இன்னும் ...

Tuesday, July 27, 2010

போர் ?


ஆள் இல்லக் காடாம் ...
யாருக்கு சொந்தம்
என்று போராம் ...
இங்கு நாடே சுடுகாடானது
அந்தக் குருடர்களின் கண்களுக்குத்
தெரியுமா என்ன? ...

பிரிந்தது


உனை நினைத்து
எழுதிக் காலியாகும்
பேனா கூட நீ
பிரிந்த அழகை சொல்லி ...
என் நெஞ்சை கிள்ளிக் கொல்லுதடி ...

முற்று புள்ளி



அன்பே நீ சிரிப்பதைக்
கொஞ்சம் நிறுத்திக்
கொள் ... என் கவிதைகள்
முற்று புள்ளி கேட்கிறது ...

மென்மையோ?




மென் மலராக இருந்தாலும்
விழியில் விழுகையில்
உறுதித் துன்புறுத்தத்தான்
செய்யும் ...

Monday, July 26, 2010

வேண்டிய சாபம் வரமாக

காதல் என்னும் பாதை
பிரிவென்னும் ஊருக்குத்தான்
என்றால் அந்த பயணத்தில்
நான் வழிதவறவே ஆசைப்படுவேன் ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்