Saturday, January 24, 2015

என்(னை) ஆண்டாள்

ரங்கோலி அழகாய் வரைந்திருந்தாள்.
இருந்தாலும்
நெற்றியில் சரிந்து விழுந்த முடி ஒதுக்கையில்
கன்னத்தில் லேசாய் ஒட்டிக்கொண்ட வண்ணக்கீற்று
அதைவிட அழகாய். 


ரங்கோலி வரைந்துவிட்டு,
பக்கத்திலையே உட்கார்ந்து கொண்டு
எப்படி இருக்குது என்று கேட்கிறாள். 

கோலத்தை அழகென்று சொன்னால்
அது எவ்வளவு அப்பட்டமான பொய். 


மார்கழி முடிந்தபின்னும்,
அவள் வீட்டு முற்றத்தில் மட்டும்
மூன்று புள்ளி நெளிவு(நெளிந்த) கோலமொன்று
இன்னும் அழியாமல்.  


மகள் கைபிடித்து, கோலம்போட
தேவதை அவள் சொல்லிக்கொடுக்க
பாதி தூக்கத்தில் நான் ரசித்துக்கொண்டிருக்க 

எருமையை எழுந்திரிக்க சொல்லி
அம்மா எழுப்புகிறாள்.
கனவு (மட்டும்) கலைகிறது.  

ஆண்டாள் அரங்கனை சேர்வதில்
ஒரு நாள் தாமதம் ஆகிறது.  

- காதலிக்கப்படாதவன் 

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்