Tuesday, November 27, 2012

சேவல்கள் நல சங்கம் - 2

சேவல்கள் நல சங்கம் - 1

முன்குறிப்பு - சேவல்கள் நல சங்கம் செவல்களுக்காக மட்டும் பேசுவதாய் இருக்க கூடாது. சேவல்களின் குற்றங்களையும் பெசவேண்டுமல்லவா?



நிழல்கள் தொடங்கி  நீர்பறவை தாண்டி
பரதேசியின் பாடல் வரை எழுதிவிட்ட
கவிபேரரசரின் பேனாவிற்குகூட
பெண்ணை எழுத
"கொடி காய்த்த இரு இளநீர்"
தான் உவமையாகிறது இன்றும்!

காந்தி கனா கண்டதுபோல்
தனியாய் தெருவிலெல்லாம்
நடக்க தேவையில்லை ...
இவளால் பயமின்றி முகப்புத்தகத்தில்
ஒரு  புகைப்படம் ஏற்ற முடிகிறதா?

வெறும் கரப்பான் பூச்சிகளுக்கும்
தெரு நாய்களுக்கும் தாண்டி...
பள்ளியில் குரு 
கல்லூரியில் வாலிபம்
பேருந்தில் இடி அரசன்
தெரு முக்கில் சிகரெட் ஆசாமி
நிராகரித்த ஆண்மகனின் அமிலத்திற்கு
இரவில் நிழலுக்கு கூட ...
இப்படி எத்தனைக்கு தான்
அவள் பயபடுவாள் இன்னும்?

வள்ளுவன் மூன்றாம் பால்
எதற்கு எழுதினான்...
மாதவம் செய்தவள் என
மீசை கவி துடித்தது எதற்கு

இன்னும்
சமைத்துபோடும் அடுப்பாக
இரவு  பசிக்கு விருந்தாக
பெற்றுகொடுக்கும்இயந்திரமாக
கோபம் காட்டும் பொருளாக
மட்டும்  இருக்காவா என்ன?
சாப்ட்வேரில் வேலை பார்த்தாலும்
இன்னும்  தன் கணினியின் ஆபரேட்டிங் சிஸ்டம்
மாற்ற தெரியாதவளாக வாளர்க்கபடவா?

இல்லை என்று சொன்னாலும்
ஏதோ ஒரு ரூபத்தில்
ஒரு பெண்ணின் காயத்திற்கு
காரணமாய் ஆண் இருக்கிறான்...

தேவதைகள் சிறகுகள்
ஒன்று விலங்கிடப்பட்டிருக்கிறது
இல்லையேல் ஒடிக்கப்பட்டிருக்கிறது...
எல்லோருக்கும் வரங்கள் கொடுத்தாலும்
இன்னும் அவளுக்காய் மிச்சமிருப்பது
ஒரு சாபம் மட்டுமே...
அது அவள் வாழும் நாட்கள்


Sunday, November 25, 2012

எதன் விசும்பலது



என் வீடுகளின் தரையுள்
ஏதேதோ ஓசை...
எதுவாக இருக்கும்?
எதனுடையதாய் இருக்கும்?

துடிக்க  அருக்கப்பட்டு
நிலையாக கட்டிலாக
உருகுலைக்கப்பட்ட மரத்தின்
காய அனத்தலோ?

அடி தெரிந்த ஆற்றில்
சுரண்டி வந்த மணலின்
எதோ  ஓரத்தில் ஒட்டிக்கிடக்கும்
ஈரம் ஆவியாகும் ஓசையோ?

மனைக்காக  நிலமிழந்து
விவாசயாமொழிந்த நொடியில்
பசிகண்ட வயிற்றின் முனங்களோ?

வீடிழந்த  எதோ ஓர் மிருகத்தின்
சாபமோ?
வீடில்லா  எதோ ஓர் மனிதனின்
வேதனையோ?

ஏதேதோ ஓசை...
எதுவாக இருக்கும்?
எதனுடையதாய் இருக்கும்?
என் வீட்டின் தரையுள் கேட்கிறது ...

மண்டைக்குள்  ஒலிக்கும்
டியூ தவறிய போது
கடன் கொடுத்த வங்கிக்காரனின்
கேட்ட வார்த்தையை தாண்டி...
"அங்க மாதிரி இது இல்லை"
என்கிற  வீட்டவரின் பெருமூச்சு தாண்டி
அருகிலுரங்குபவர் குறட்டை தாண்டி
ஏதேதோ ஓசை

எதுவாக இருக்கும்?
எதனுடையதாய் இருக்கும்?

பின்குறிப்பு - இப்படி பார்த்தால் சோறு கூட தின்ன முடியாது... மனிதன் வாழ தான் பூமி என்பவரே ... மனிதன் வாழ்வதற்கு மட்டுமல்ல பூமி...


Thursday, November 22, 2012

அடடே ஆச்சரியக்குறி - 2

சேலை கட்டிய உன் புகைப்படம்
ஏற்றுகிறாய் முகப்புத்தகத்தில்

அதில் சேலையை போய் அழகென்று
வர்ணித்து தொலைப்பவரெல்லாம்
முகத்திலிரண்டு புண்ணுடையோர்...

(O_O) + (O_O)

என்  நண்பர்கள் சந்திக்கும்
கடினமான கேள்வியும்
அதிகபட்ச தொல்லையும்
"ஏன் மச்சான் நான்ஜெஸ்ஸிய
காதலிச்சேன்?" என்பதே...

[அவளின் செருப்பின் நலன் கருதி
என் கண்ணத்தின் நலன் கருதி
பெயர் மாற்றப் பட்டுள்ளது ]


(O_O) + (O_O)

ஒரு குழந்தையை
அதிகமாய் அடி வாங்க வைப்பதும்
அழுதிட வைப்பதும் மிட்டாய் தான்...
ஆனால்
குழந்தைக்கு மிகப் பிடித்தது
மிட்டாய் மட்டும் தான்

எனக்கு உன்னை போல்...

(O_O) + (O_O)

யாரைபற்றி எழுதுகிறாய்
என்று ஒரு முறை கேட்டுவிடு

"உன்னை பற்றி தான்"
என்னும் என் பதில்
ரொம்ப நாளாய் காத்து கிடக்குது

(O_O) + (O_O)

 அடடே ஆச்சரியக்குறி - 1

Monday, November 19, 2012

பேட்சுலரின் சென்னை


தீண்டாமை ஒழிந்துவிடவில்லை
வேறு ஒரு உருவம் எடுத்துள்ளது

குடும்பத்தினருக்கு மட்டும் வாடகைக்கு
என்ற பலகை
நாய்களை அனுமதிக்கிற அந்த வாசல்வழி
எங்களை அழையா விருந்தாளியாக்கிவிடுகிறது

நாங்கள் வந்தாலே மகள்களை
உள் போகச் சொல்லி
முகத்திலடிக்கப்படுகிறது
அபார்ட்மென்ட் வீடுகளின் கதவு
அப்படி செய்வது  அவர்களின் மகள்
ஸ்பெஷல்  கிளாஸ் போவதை
தடுத்திடுமோ

எங்கள் யோக்கியதனத்தை
அவ்வளவு சோதிப்பது
இவர்களின் வீட்டு கழிவறை சன்னலில்
புகை கசிவதை தடுத்திடுமோ
ஆனந்த விகடனிலும் ராணியிலும்
தொலைந்த நடுப்பக்கத்தை மீட்டிடுமோ

நாங்கள் குளிர்பான பாட்டிலும்
வாழைப்பழ சீப்புமாய் வந்தால்
கீழும் மேலுமாய் பார்த்துவிடுவது
அவர்களின் மகன்
குருப் ஸ்டடி போவதை
தடுத்திடுமோ?

பனை மரம் என்று
எழுதிய இடத்திலிருந்து கூட
எங்களால் பால் குடிக்க முடிவதில்லை

மருமக உடைச்சா
மண்சட்டியும் பொண்ணாம்
எனக்கு நீ மாமியாரும் இல்ல
நான் உனக்கு மருமகனும் இல்ல
இங்க எந்த சட்டியும் உடைபடவில்லை
ஏனோ எங்கள் மீது  குற்றசாட்டு  மட்டும்


சோதனை நாய்களாய்
எங்களை அவர்களின் கண்கள்
தினம் முகர்ந்து பார்க்குது ஏனோ!!

என்ன முகர்ந்தென்ன
கழுதையால் என்றும்
கற்பூர வாசம் உணர முடியுமா என்ன?

Tuesday, November 13, 2012

ஆவளியிலோர் அணைந்த விளக்கு

நல்லெண்ணெய்கு பின்னான
சிகைக்காய் ஷாம்பூவாகிருந்தது

ஒரு  வரமாய்
உரல்  உருட்டி
மருமகள் இடுப்பொடித்து மாவிடித்து
அடுப்பெரித்து என்றுவரும்
அம்மாவின்  முறுக்கு ஜிலேபி எல்லாம்
இன்று  ஸ்வீட் கடைகள் கொடுத்தது

ரொம்பவே மாறிப் போச்சு
தீபாவளி 

=O=O=

பூமி சாவதற்கு முன்பே
அதன் மரண ஊர்வல
வெடிகள் தீர்ந்து போகிறது

இதோ ஆண்டுக்கு கொஞ்சமாய்

=O=O=

சிவகாசி மூலை இடுக்கில்
ஓசையின்றி தினம் எவரையோ
எரித்துவிடுகிறதென்ற
 கோபமா என்ன?

இதோ தெருவெங்கும்
பட்டாசுகள் மீது
பழிதீர்க்கப்படுகிறது

=O=O=

ஒரு வெடியால்
பாதிக்கப்பட்டது அந்த ஜப்பான்
இந்த  வெடியால்
உலகையே பாதிக்கிறது
இந்த குட்டி ஜப்பான்

=O=O=

எந்த கண்ணகி சபித்தளோ
பற்றி எரிகிறது பூமி

மின்வெட்டு  பூமியில்
இன்வெர்ட்டர் கருணையில்
ஏசி குளிரூட்டும்வரை
எவன் கவலைபடபோகிறான்

=O=O=
 
தெருவெங்கும் குப்பையாகிப் போன
அந்த வெடிக் காகிதங்களில்
எதோ ஒன்றில்

எழுதப்பட்டிருக்கலாம் எஞ்சிக்  கிடக்கும்
குழந்தை தொழிலாளியின் கனவு
எறிந்த  குடும்பங்களின் வேதனைகள்
பணக்கார முதலாளிகளின் சூச்சுமங்கள்

பின்குறிப்பு - 
பட்டாசு ஒரு நாள் சந்தோசம்... அதை என் குறை கூறுகிறாய் என்பவர்களே... இனி நீங்கள் உங்கள் வெடிகளை உங்கள் வீட்டுக்குள் வெடித்து புகையை உங்கள் குடும்பத்தோடு குடித்துவிட்டு மிஞ்சும் கனலையும் கறியையும் நீங்களே தின்று விடுங்கள்... எங்கள் பூமியை விட்டு விடுங்கள்

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்