Saturday, July 30, 2011

பசுமை மாயம்



பட்டாசுகள் வெடித்து
சிதறுகையில்,
எல்லோர் இருதயமும்
வண்ணத்தில் களித்திருக்கையில்
என் மனம் மட்டும்
வானை கரியாக்கும்
புகையிலும் பூமிக்கு
பூமாரித் தூவும் வெத்து
காகிதத்தில் லயித்து
வருந்துவது ஏனோ?
பசுமை பசுமை
என்று இதழ்கள்
புலம்ப …
பூமிக்கு மாரடைப்பு
வரவைக்கும் பட்டாசை
கைகள் கொளுத்துவது நியாமா!


Wednesday, July 27, 2011

உணர்ந்தேன்

வங்கியில்
என் மாணவ கணக்கு
வருமானக் கணக்கான போது

என் நாட்குறிப்பு
தன் 31வது மகனையும்
பறிகொடுத்த போது

என் பணப்பையின்
கற்பம் களையும் போது

என் தந்தையின்
சுமை உணர்ந்தேன் 

Monday, July 25, 2011

ஷ்!

முக்தி 

என்ற ஆசையின்
வேரில் பூத்து விட்டதால்

துறவு எப்படி
முற்றும் துறந்ததாய்
அர்த்தம் கொள்ளும் 

Monday, July 18, 2011

32 நிலவு

32 நிலவு
உன் பற்களாய்
இருக்கையில்

நம் மகன்
அமவாசை அன்று
சாப்பிட அடம்பிடிக்கமாட்டான்

எப்படி?

விழியோடு மின்சாரம்
கொண்டு நீ இருந்தும்
எப்படி தமிழ்நாட்டில்
மின் பஞ்சம் ?

நம்பிக்கை

நீ நகைப்பாய்
என்ற நம்பிக்கையில்
தான்

தமிழக அரசு
மின்வேட்டுக்களால்
ஊரெங்கும் இருளாக்குது

Sunday, July 17, 2011

கண்டேன் காரணம்

காதல் தண்டனை
பெற்றதால் தான்
கைதியாகினர்
காதலர்கள்

விசித்திர தவறு

Saturday, July 16, 2011

ஒருமைப்பாடு

சாதி மதங்கள் என்ற
பெரும் ஆயுதம் தேவை இல்லை

பேருந்தின் சீட்டு
பேருந்து நெரிசல்
குழாய் அடி
முக்கோணக் காதல் போதும்

நாட்டின் ஒற்றுமை சோதிக்க

அடக்கம்

பேட்டரி நிரம்பி இருந்தும்
முட்கள் தேவைக்கேற்பவே
சுழலும்

அவள் அடக்கமும் அப்படித்தான்
நிரம்பிய குணத்திற்கும்
நிரம்பிய அழகுக்கும்
தலைகீழாய்

ஆங்கில முத்தம்

உண்மையில்
இனிப்பு சுவை நாளங்கள்
இருப்பது உள்நாவில் தானே?

அப்புறம் எப்படி
உன் இதழ் பட்டதும்
நான் உணர்கிறேன்
அமுத சுவையை இதழிலே

Thursday, July 14, 2011

பள்ளிக் காதல்

ரப்பர் தந்து வெகுளிச் சிரிப்பால் 
கன்னதுக்குள் குழி கொண்டவள் 
அவள் பாவாடை நுனியால் 
என் உண்டகை ஈரம் கொள்ளை கொண்டவள் 
குவி இதழால் கதை குவித்து...
முன் நெற்றி சுழிய கோபித்த குமுதா டீச்சர் 
இப்படி நொடிக்கொன்றாய் பூத்த 
வெகுளிக் காதல்...வலிகள் தராத பள்ளிக் காதல் 

விதிவிலக்கா?

தேடல் என்று
தேவையின் பொது
தீர்வு தந்தது

அளவு நீளும்
பொது பிழவாய்
போகுது ... இதற்கு

நேசம் பாசம் தேவை தேடல்
எல்லாம் என்ன விதிவிலக்கா?

Monday, July 11, 2011

மோக மழை!

ஆடை மேகம் இல்லாத
மேனி வானம் தான் தூவும்
அன்பின் சாரல்

மோக மழை

வெப்பம் தரும்
உயிர் தாகம் தரும்
மோக மழை

அப்படியா?

கோடை வெயிலாம்
புவி வெப்பம் ஏறிப்போச்சாம்
அப்படியா?

உன் கண் பார்த்து
நின்ற நான்
குளிர் மழைதான் உணர்ந்தேன்

ஏன்?

எந்தக் காதல்
கதையும் சோகத்தில்
முடிய விரும்பாதவன் நான்

ஏன் என் காதலை
சோகத்தில் முடித்து
போகிறாய்

Wednesday, July 6, 2011

நான் பெற்றவை

உன் பிரிவை
கண்ட கண்கள்

உன் மறுப்பை
கேட்டக் காது

காதல் சொல்லி
உன்னைக்
காயப்படுத்திய வாய்

இவை  நான் பெற்ற சாபங்கள் 

Monday, July 4, 2011

கண்டேன் காரணம்

மக்கள் தொகைப்
பெருக்கத்தின்
காரணம் கண்டறிந்தேன்

அழகே! உனைப்
படைத்தவன்
உன் அழகை
தோற்கடிக்கும் மற்றொரு
படைப்புக்கு முயற்சிக்கிறான் 

இறைவா!

இறைவா!

உந்தன் பிழையையும்
இன்று சவாலாக்கி
தன்னம்பிக்கை துணை கொண்டு
உலகுக்கு சவாலகிறோம் பார்
  - உடல்  ஊனமுற்ற சிறுவன்  

என்னை 
அநாதை என்னும் 
ஊனத்தோடு கடலுக்குள் 
விட்டதாய் பெருமாப்பு 
கொள்ளாதே!
தோழமை உதவி என்னும் 
இரு கரங்கள் திறமை என்னும் நிச்சல் 
போதும் பிழைப்பேன் மறவாதே!
-அநாதைச்  சிறுவன்

மகனே!

நீயும் வயோதிகமும் 
ஒன்று தான் ... காத்திருந்து பெற்ற சாபம் 
இறுதியில் கைவிடுவீர் எம்மை தத்தளிக்க 
                                                                - முதியோர்  ஒருவர்

These are words rose in my mind while i visit an Orphanage at ECR Road. Place make me think lot.


People who wish to help contact Little hearts (9940617715 begin_of_the_skype_highlighting            9940617715      end_of_the_skype_highlighting)     



Friday, July 1, 2011

பொய்யன்

உலகின் பெரிய
பொய்யனாகிறான்
என் சுழல்

எங்கும் அவள்
இருப்பதாய் என்னை
என் நினைவை ஏமாற்றி 

கண்ணின் மழை

கண்ணத்து நிலம்
பொலிந்து
பஞ்சத்தை மட்டுமே
தரத் தெரிந்த
ஒரே மழை
கண் மேகம் சிந்தும்
கண்ணீர் 

விந்தை

உன் மூச்சுக்காற்று
பிறக்கும் இடம் எல்லாம்
குழல் இல்லாமல்
இசை பிறக்கும்

உன் இமையின்
சிறு சிமிட்டலும்
புயலாய் மாறி
இதயம் கரைக்குமடி 

நீண்ட ரசனை

கோடி ருபாய்
கடிகாரம் வாங்கி
உன் கரங்களில் பூட்டினாலும்
ஓடாமல் பழுதாகிப் போகுதடி

முட்கள் இரண்டும்
உன் அழகை
நின்று ரசிப்பதால் 

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்