Sunday, October 30, 2011

என் காதல்(கதை) - எழுத்து jam

கதை என்பதே 
கற்பனை
இதுக் கவிதைக் கதை
இதன் கதாபதிரங்களும் 
கற்பனையே ...
உயிரோட்டமும்
கற்பனையே ...


பள்ளியில் 
அறுசுவைகளுக்கு
எடுத்துக் காட்டு கேட்கையிலே 
காதலை கசப்புக்கு 
சொன்னவன் நான் 

காதலென்றால்
சுடப்படாத பானை கொண்டு 
தீரத் துடிக்கும் தாகம்
என்று பொருள் கொண்டவன் நான்

இப்படி நான்
கொண்டது கண்டது
பொய்யானது
செப்டம்பர் 10, 2007

காதல் மின்சார வகை
அது வலிக்காமல்
உயிர் நீக்காமல்
உடல் புகும்
என்று அன்று கண்டேனடி

எந்தன் பேனா
கண்ணாகி
என் கனவை கண்டது
ஓவியமாய்

பேனா கையில் கண்ட
குழந்தை வீட்டுச் சுவரைப் போல
காதல் கொண்ட
என் மேசை, படுக்கை
அழகானது
ஓவியங்களால் கவிதைகளால்

கணிதம் சொல்கையில்
கசந்த காஸ் சைன் தீட்டாக்கள்
மறைமுகமாய் அவளைப் பார்க்க
கோணம் நான் தேடுகையில்
இனித்தது

இருவர் உடையும்
நிறத்தில் ஒற்றிப் போகையில்
நியூட்டனின் புவிவிசை விதியோடு
முரனாகி விண்பறந்தேன்

பின் அமர்ந்த
அவள் முகம்
பார்க்க கைகடிகார பிம்பம்
நான் கொண்டேன்

அவள் பேசக் கேட்ட பின்பு
ஆங்கிலமும்
காதுக் கிண்ணங்களில்
தேன் நிரப்பியது

அன்று முதல்
பாடவேளை மணி
விரைவாய் ஒலித்ததாய்
உணர்ந்தேன்...
மறுநாள்
கல்லூரி செல்ல
துடித்துக் கிடந்தேன்

எனது ப்ரோக்ராம்
ஒன்று அவள் சந்தேகத்திற்கு
விடையாகையில்
உலகை வென்றதாய் உணர்ந்தேன்

இப்படி நிஜமாய்
தேடிய காதல் முழுதும்
நிழலாய் புதைந்து போனது
என் நாட் குறிப்பின்
பக்கங்களில் என்க்றிப்டெட்
வரிகளாய் புதைந்து போனது
அந்த பிரிவின் படையெடுப்பால்

பணம் வேற்று நாட்டில்
வெறும் காகிதம் ஆனது போல்
அவள் இல்லா ஊரில்
செல்லாமல் போனது என் காதல்

நங்கை அங்கம் எரும்வரை
தங்கம் வீண்
என் காதலும் வீணானது
உருகி உருகி காதலித்து விட்டு
சொல்ல மறந்ததால்

களம் இறங்கும்
முன்னர் செக் வைக்கப்பட்டு
விழ்த்தப்பட்ட
சதுரங்க ராஜாவை உணர்ந்தேன்
காதல் சொல்லும் முன்
தோல்வியில் முடிகையில்

எழுத்தின் முற்றுப் புள்ளியால்
கவிதையை முடிக்காமல்
கண்ணீரின் அறைப் புள்ளி
வைத்து காத்திருக்கிறேன்....

பட்ட மரம் துளிர் விடும் என்ற நம்பிக்கையில்


பாதியாய்
வாழ்வின் மீதியைத் தேடி
           
                 - ramanuJAM

சிலக் கதைகளில்
வெற்றி பெறுகையில்
காதலர்கள் காதலைப்
போய்கிறார்கள்
சிலக் கதைகளில்
முந்தயவர்களை எடுத்துக்காட்டாய்
கொண்டு உண்மையை நம்ப மறுக்கிறார்கள்

ஆகா உண்மைக் காதல்
எளிதாய் மாய்கிறது

மனதில் பாரத்தோடு
உலகிற்காய் சிரிக்கும் வலி,
உயிர் போகாமல் மரணம் கொண்ட
பிணமாகிப் போகிறார்கள் காதலர்கள்


Saturday, October 29, 2011

தே(னீ )னிவள்

கொடுக்கு விழுவதும்
விடு படுவதும்
தெரியாமல்
உடலில் வழி
ஏற்றிப் போகும் குழவி போல

ஒற்றை பார்வையில்
இதயம் பிளந்து
காதல் விதைத்தால்
என்னவள் ... சுகமான வழி இது

Wednesday, October 26, 2011

ஆழம்

முரியா அளவில்
விசமேரிய உடல் போல்

காதலேரிய இருதயத்திலும்
மறவா ஆழ் நிலை
உண்டென்று உணர்ந்தேன்...

உன்னை மறக்க முடியாமல்
திணறிய பொது 

Tuesday, October 25, 2011

வெடி சி(க)தறல்கள்

உன் ஒரு நிமிட
மகிழ்விர்க்காய்
அங்கே வெடித்துச்
சிதறுவது ...
உண்மை சிரிப்புகள் அல்ல
சிறை வைக்கப் பட்ட
குழந்தைத் தொழிலாளியின்
கண்ணீர்கள்...

பட்டாசுகள் தவிருங்கள் ... நீங்கள் மறைமுகமாய் பூமியை வாழவைக்கிறீர்கள்...குழந்தைத் தொழிலை வாட வைக்கிறீர்கள்

பசுமை தீபாவளி


தீமைகள் தான் 
சுடப் படவேண்டும் 
வாழும் பூமியல்ல

புகைக்காத புன்னகை 
பூத்தால் போதும் 
புகை அடிக்கும் 
மத்தாப்பு வேண்டாமே!

நட்பு சொந்தங்களின் 
தீண்டளிலே 
நீ விண்ணைத் தொட்டால் போதும் 
புதைந்து கிடக்கும் 
வெடிமருந்தை 
ராக்கெட் ஆக்கி காற்றோடுக் 
கலக்க வேண்டாமே!

இயல்பாய் சேரும் 
அன்பில் உன் உள்ளம்
பொங்கி வழிந்தால் போதும்
பொய் மருந்தின் தீண்டளிலே
வண்ணங்கள் பொங்கும்
பூக்கூடை வேண்டாமே!

கால்கள் தேய 
உறவுகளோடும் நட்போடும் 
கை கோர்த்து 
ஸ்நேகக் காற்று வீசும்
பிறந்த மண்ணில்
நீ சுற்றி வந்தால் போதும்
கறியை விதைத்து 
மரணத்தை அறுவடை ஆக்கும்
சக்கரம் வேண்டாமே!

மகிழ்ச்சியின் 
நிரந்தரம் என்றுமே 
ஆக்கத்தில் தான் 
அழிவில் இல்லை 
அழிந்தது நான் 
தரும் மகிழ்ச்சி 
நிரந்தரம் இல்லை 
                                                - பட்டாசு 

இனிய பசுமையும் மகிழ்ச்சியும் பொங்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்



முத்த பாய்ச்சல்


வெட்டவெளி சாலையோடு 
நூறு மைல் வேகத்தில் 
மோட்டார் குதிரையில் 
சாரல் மழையோடு
காற்று ஸ்பர்சம் தீண்ட 
போய் பாருங்கள் 

காதலியின் ஒற்றை 
முத்த சுகம் அது தரும்.

Sunday, October 23, 2011

மனிதப் பூச்சிகள்

இதன் நெருப்போடு
தன் மூத்தோன்
பலரை பலிகொடுத்தும்
விளக்கோடு சுகம் தேடும்
விட்டில்கள் போல

உலகம் தொடங்கியது தொட்டு
பலரை பலிவாங்கிய
காதலிடம் சுகம் தேடும்
இந்த மனிதப் பூச்சிகள்

அதில் நானும் ஒருவனாய் ... 

Saturday, October 15, 2011

நிறைவெறுமை

உன்
எண்ணை சுமக்காத

உன்
குறுஞ்செய்தி...
அழைப்பு
பெறாத
எனது கைப்பேசியின்

உயிர் நிறைந்திருந்தும்
மரணித்த பிணமே...
உன் காதலைப் பெறாத
என்னைப் போல் 

Thursday, October 13, 2011

பூமியை வாழவிடு



தலைப்பை படித்ததும்
நவீன இளைஞனின்
உளத்தில் வடிந்த வரிகள்
நடைமுறை வடித்த வரிகள்

நாங்கள் பெற்றத் தாய்க்கு
விசமூட்டிவிட்டு
அவள் முலையில் பால் தேடும்
மூடர்கள் ... நங்கள்
எங்கே இயல் உரத்தால்
பூமியை வாழவிடுவோம்

என் நாவு மட்டுமல்ல
என் ஏழு தலைமுறையும்
சுவைக்க சத்தான உணவு வேண்டும்
ஆனால் என் விளை நிலங்கள்
வீடு மனையாகும் ... நாங்கள்
எங்கே பசுமையாய்
பூமியை வாழவிடுவோம்

கோவின் காவலுக்கு
ஒசான் போர்வை போதவில்லை
என்று நினைத்தேனோ என்னவோ
இதோ அலைபேசி அலைக் கற்றையால்
போர்வை போர்த்தி
வாழ வைக்கிறேன் பூமியை

தாய் முகம் பருவேன்று எண்ணி
பறைகள் இருக்கும் இடம் எல்லாம்
பட்டாசுகள் பதுக்குகிறேன்
தாய் நெஞ்சில் முள்ளேன்று
நினைத்தேனோ என்னவோ
காணும் மரங்களெல்லாம் வேரறுத்தேன்

பூமியையும் புகைக்க வைத்தோம்
என் தொழிற்சாலை புகைப்போக்கியால்
போதாதென்று வராத போருக்கு
தகாத ஆயுதம் சோதனை செய்கிறோம்
தாய் கருவறைக்குள்
நாங்கள் எங்கே வாழவிடுவோம்

பூமியை நிம்மதியாய்


இவைகள் எவர் இதயமும்
நிந்திக்க எழுதியதல்ல

மூளை கொஞ்சம் சிந்திக்க எழுதியது 


P.S. -
"This lines won a consolation prize at Suryab FM's poetry competition on Vairamuthu's Birthday"

பி.கு. -
"இந்த வரிகள் சூரியன் எப்.எம். கவிபேரரசு வைரமுத்து பிறந்தநாளன்று நடத்திய கவிதைப் போட்டியில் அறுதல் பரிசை வென்றது "

Tuesday, October 11, 2011

ஜனநாயகம்

தன் தலைஎழுத்தை
மாற்ற ஒரு நாள் கூட
கையை மையில் நனைக்காத
மூடன் இவன்

முகப்புத்தக சுவரோடு
அடுத்த SUPER STAR
எவன் என்று
போட்டி போடுகிறான் வோட்டு போட

என்று மாறும் இந்த மூடத் தனம்

Sunday, October 9, 2011

அறிவியல் பிரம்மன்


இவன் பூமியில் 
தொடர்ந்தால்
தனக்கு போட்டியை 
மின்னணுக் கடவுளும் 
சிமுலேடேட் கருணையும் 
படைத்திடுவனோ 
என்று பயந்தான் போல இறைவன் 

இசை கடலேன்றால் 
அந்தக் கடலை 
ஒவ்வரு ரசிகனின் 
கைகளுக்குள்ளும் 
அடைத்த அறிவு இவன் 

புத்தி கொடுத்தவன் பிரம்மனென்றால்
கணினிக்கு புத்தி 
கொடுத்தவன் இவன் 
அறிவியல் பிரம்மன் என்பது 
மிகையல்ல 

காதலியின் இதழ் இடை 
சீண்டி விளையாடிய விரல்களை 
கைபேசியின் வசீகரம் உறசவைத்து 
காதலர்கள் சாபம் 
அள்ளிக் கட்டிக் கொண்டவன் 

பகத் சிங்கின் மரணத்தில் 
வீரம் அநாதை ஆனது போல்  
ஐன்ஸ்டீனை அடுத்து 
இவனது மரணத்தில் 
படைப்பாற்றல்
இரண்டாம் முறை 
அநாதை ஆனது 

Dedicated to STEVE JOBS. Nothing compensate his loss. Designed by Jam











Saturday, October 8, 2011

மாற்றம்

கொடிய விஷம்
சயனைடு
என்று என் புத்தகம்
சொன்னதை

காதலென்று
ஏன் நீ மாற்றிப்
போனாய் ?

Wednesday, October 5, 2011

ஆக்கம்

மனிதன் கடவுளாகிறான்
தர்மம் செய்கையில்

கடவுளும் பிச்சைகாரணாகிறான்
கோவில்களின் பார்வைக் கட்டணங்களால்


Monday, October 3, 2011

மயூர நாட்டியம்

ஒரு அங்குல
மயிலொன்று தொகை விரித்து
அழகை பரப்பிய மாயம்

அந்த சின்ன விழியா(ல்)ள் 
அவள் புருவம் சுளித்து
என்னைப் பார்க்கையிலே

Saturday, October 1, 2011

தெ(ய்வ)ரியும்

கடவுளையும்
கல்லென்று
நாத்திகம் பேசித் திரிந்தவனுக்கு

நெருக்கடியான சமயத்தில்
கல்லும் கடவுளாய்த் தெரியும்

தேர்வின் நெருக்கடியில்
புத்தகம் தேடும் மாணவனின்
தேடல் போல ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்