Thursday, April 28, 2011

என் கவி சுட்டுவது

தன் முளையில் பாலுன்ன
வலியாய் உணர்ந்த தாய் உண்டோ?

இதோ என் கற்பனையை 
உறிஞ்சி பெருகும் என் 
கவி குழந்தைக்கு நான் தினம்  
வருந்தி சாகிறேன் ... ஏனெனில் 

என் கவி சுட்டுவது
நடந்தேறும் குற்றத்தை அல்லவா 

என் கவியின் பெருக்கம் 
சுட்டிக் கட்டுது முற்றி வரும் 
கழி காலத்தை அன்றோ?

துடுப்பு


படகோடிட வியர்வை சிந்தும் துடுப்பு 

இதோ அரசாங்க அலுவலகத்து  நாட்டுக்குள்ளே  
காலமென்னும் நதிமீது 
விரைவாய் உன் மனுவிற்கு 
பயணம் ஒன்று அமைத்திட 
தூடுப்பாக வேண்டும் பணம் 

ஒரு சிறு வித்தியாசம் 
இங்கே துடுப்பு வியர்வை சிந்த தேவை இல்லை



இதோ அரசாங்க 
அலுவலுக்கேன்றொரு
புது மனு 


Wednesday, April 27, 2011

ஒன்றே!

பணமும் 
மழலைச் செல்வமும்
ஒன்றே ...
தேவைப் படும் 
இடத்தை என்றுமே
நிறைத்ததில்லை 

Tuesday, April 26, 2011

கற்பனை பூ வந்த உண்மை வண்டு

இவைகள் கற்பனைகளும் அல்ல காயப்படுத்த எழுதியதும் அல்ல
சிந்தை சிலிர்க்க சிந்தும் சிந்தனைச் சாரல் 
இவை பலரை காயப்படுத்தலாம்
உண்மையில் உள்ளத்தின் உண்மையை பேசுபவனே
உதட்டில் உண்மை கொண்டவன்
இதோ என் இதயம் இயம்பும் உண்மைகள் 

இதையும் தாண்டி காயம் 
ஆழ் சென்றால் மன்னிப்பை வேண்டுகிறேன் 



இதோ அறிவார்ந்த ஆண் மகனே!
உனக்காய் ஒரு கேள்வி...
ஆழி அமைதி பெண் மனதில்
அமிழ்ந்துப்போன வார்த்தைகள் 





உன் அகராதியில் பெண் என்றால்

காதல் என்ற நம்பிக்கையில் 
நீ மீறும் வரம்புகளுக்கு வழிவிட
இறுதியில் தோற்றுப் போய்  
தூக்குப் போடும் அனாமத்து உயிரோ?

நீ நேரடியாய் பலி வாங்குவது
ஓர் உயிர்
சமுகத்தில் ஆண்மகன் மேல் 
அழியா தீம் பெயர் உருவாக்கி
பலி இடுவது 
எண்ணி அடங்கா உயிர் 



காலனிடம் சவாலிட்ட
சாவித்திரியின் வாரிசுகளே!
உங்களிடம் சவாலிடும் கேள்வி இதோ 
அடங்கா ஆண்மகனின் ஆழ் மனதில்
அடங்கிப் போன வார்த்தைகள் 



உண்மையில் 
காதலை நீங்கள் வெறுப்பது எதனால்?
பெற்றோரின் மேல் கொண்ட மதிப்பாலோ 
நல்லவன் கிடைக்காத வெறுப்பாலோ 

உண்மை இதுவகத் தான் 
இருந்திட வேண்டும் 

மூச்சு முட்டும் அளவில் பணம்
இமைக்கின்ற ஒவ்வொரு நொடியும் வெவ்வேறு நாட்டுப் பயணம்
இப்படி வாழ்க்கைத் தேடி தரும்
பெற்றோரின் தேர்வை தகர்த்தெறிந்து
உயிர் உருகும் தெய்விகம்
என்று வறுமையின் வாசத்தில்
காதல் வசனம் பேச
விருப்பம் இல்லையோ?

மன்னிப்புடன் பதிக்கிறேன் 


Sunday, April 24, 2011

என் செய்வேன் நான் ?

காதலி ஆசை
எது வாகினும்
நிறைவேற்றிட நான் 
தயார்...

அதற்காக அவளை
மறந்துவிட சொன்னால்
என் செய்வேன் நான் ?

அதனினும் கடினம்

பெண் மகளை 
பெற்று எடுத்து
ஒழுக்க நெறி நிரப்பி
வளர்த்து, மணமுடித்து 
அனுப்புவதே உலகில்
கடினம் என்கிறது சங்கத் தமிழ்

இல்லையடி நெஞ்சோடு 
சுமந்த உன் நினைவை 
வேர் அறுத்து எறிவது அதனினும் 
கடினம் 

Saturday, April 23, 2011

பெண்ணின் திருமண தண்டனை

இனம் இனத்தைத்
தான் சேருமாம்
அதான்
உருகா மனித உள்ளம்
நாடுகிறது உலோகத்தை
வரதட்சணையாய்

கைதிகளுக்கெல்லாம்
தூக்கு கயிறு மேல் நோக்கி தானே?
பெண்களுக்கேனோ 
கீழ் நோக்கி ... தாலியாய் ...

தங்கம் உயிரை உறிஞ்சும் 
இருவழியில்...

விலையேறி வாடிக்கையாளனிடம் 
நகையாகி பெண் வீட்டாரிடம்  


 
 

முட்டாள்களோ?

உன் கண்ணையே
தகிரியமாய் 
பார்த்தவன் நான்
என்னை அரிவாளால் 
மிரட்டப்  பார்க்கின்றனர் 
உன்னை பெற்று எடுத்தோர்

மேடை ஏறிய என் கவி

முதல் முறை மேடை ஏறிய என் கவி
சகதி கம்பளம் தான் மிதித்து சாரல் பூ தான் தூவ
நடந்த mepco's 27th college day



Sunday, April 17, 2011

எது ?

தண்ணீரே தீர்வேன்றறிவேன்
தகிக்கின்ற தாகத்திற்கு

எது இதன் தீர்வென்று
 எவர் அறிவார்
கொதிக்கின்ற காதலுக்கு

விழி பேனா வழி வழிந்து
உயிர் மை தீர எழுதுகிறேன்
தேடல் எனும் கடுதாசி,
நானறியா உன் முகவரிக்கு

மழைக்காய் காத்திருக்கும் பாலை நிலம் போலே
ஏமாற்றம் எனத் தெரிந்தும்
நீளுது உனைத் தேடியே என் பயணம்


Saturday, April 16, 2011

Bye Bye MEPCO


ஏறத்தாள 580
விரல்கள் என்
வெற்றிக்காய் போராடும்

580 இருதயம்
துடிக்கும்
நான் ஒருவன் உயிர்வாழ

நினைவுகள்

sight அடிக்காத ஆணின் கண்
ஓரவிழி பாரா பெண்  
(இரண்டையும் பலர் பல விதத்தில் பொருட் படுத்தலாம்)
கவிகள் சுமக்கா கல்லூரி மேசை
இவைகள் தான் உலகில்
பெரும் பாவிகள் பட்டியலின்
முதாலாமவர்கள் 

என்னை அழகாய் மட்டுமே 
காட்டத் தெரிந்த
தோழனின் சட்டைகள்

ஓசை வாராமல் பேச முடியுமா?
இதழ்கள் அசையாமல் வார்த்தை பிறக்குமா?
இவைகள் என் தோழிகளின்
தனி திறமைகள்

ரகசிய சிறை வைத்த
குற்றத்திற்காக
கத்தி அம்பலப்படுத்திய
தோழியின் கைப்பேசி

நாங்கள் வருங்கால
isro விஞ்ஞானிகள்.
இதோ சான்றாய் பரந்த
காகித ராக்கெட்கள்

உண்மை நேசத்திற்கு
ஆண் பெண் எல்லை இல்லை
உண்மை காண வைத்த
infy campus connect 

  மன்னிப்புக் கடிதத்தின்
நுனி பிடித்து
உயிர் உசலாடிய
தாத்தா வகுப்பு
வருகை பதிவேடு

வருகை பதிவேடும் 50 ரூபாயும்
சடுகுடு ஆடிய
செமெஸ்டரின் கடைசி நிமிடங்கள்

49 க்கும் 50 க்கும்
இடைப்பட்டதே உலகில் இருக்கும்
மிக நீண்ட...ஆபத்தான பாதை

எவன் அழைத்தான்
சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வருகிறது
பரிட்சை முதல் நாள் தூக்கம்

என்னை சோம்பேறி ஆக்கிய காலைக் கடிகாரம்
அலுப்பில் கொஞ்சம் சோம்பேறி ஆனா பாடவேளைக் கடிகாரம்
பெரும் பச்சோந்திகள்

புது புது கரைசல்கள்...வேதியியல் ஆராய்சிகள்
விஞ்ஞானிகளை மிஞ்ச வைத்த  
பிறந்தநாள் ஆயத்தங்கள்
வருடத்திற்கு இரண்டு முன்று
பிறந்தநாள் கேட்க்க வைக்கும்
சந்தோசத் திண்டாட்டங்கள்(மன்னிக்கவும் கொண்டாட்டங்கள்)

ஆனந்த மழையில் நனைய வைத்த
மாலை விடுதி விருந்தும்
காய வைத்த  warden enquiryயும்
உரைய வைத்த கோடை உலாவும்
நடுங்க வைத்த அபராதமும்

Placement போருக்கு
முன் நாள் POவின் வீரவுரையும்
11 மணி ஐரோப்பா வரலாறும்
8 மணி வரை நீளும் மாலை உரையாடலும்

முதல் முறை திறமையை
அடையாளம் கண்டு
மறுமுறை ஏமாற்றும்
அரசியல் சொன்ன festember

பசி ருசி அறியாது
சொல்லித் தந்த விடுதி உணவு

அழையா விருந்தாளி "கண்ணீர்"
கெடுத்த பிரியாவிடை விருந்து

Dedicated to Mepco Friends, those who fill the pages of my life as smiles, tears, teases and sweet memories...I love u friends...
I won't miss U...Bcoz b touch with tis idiot


Wednesday, April 13, 2011

நெல்லை அண்ணா பல்கலைகழகம்


திருநெல்வேலி சிறப்பு எது

அன்பால் கரைக்கும்
நெல்லைத் தமிழா?
நுனி நாக்குத் தொடங்கி
ஆள் உயிர் வரை இனிக்கும்
இருட்டுக் கடை அல்வாவா?

இல்லை கோடி அடுக்கி
உயிர் தீரப் படித்தாலும்
படிகாததை கேள்விக்கும்
அண்ணா பல்கலைகழகம்

அப்டியே தவறியும் பக்கங்களை
உன் மூளையால் நிரப்பிவிட்டாய் எனில்
அதற்கு பூஜ்யங்களை மட்டும்தான்
போடத்தெரிந்த
திருநெல்வேலி சிங்கங்கள்

இவர்களிடம் ஐன்ஸ்டீனும் முட்டலாவார்
அலெக்சாண்டரும் தோல்வி காண்பான்








தேர்தல் சிறப்புப் பரிசு



நேற்று...

சிந்தபோகும்
ஈழ ரத்தத்தின்
ஒத்திகை...
அதற்க்கு அரசியல் தலைகள்
சிந்தும் முதலை கண்ணீரின்
நகலிது...



இன்று...

நம் மக்களாட்சி
உரிமையை 200 ரூபாய்க்கு
விற்று விட்டு
அத்தியாவசியங்களை அதிக விலைக்கு வாங்கும்
அவலத்தின் ரசிது...

நாளை...

நாங்கள் பிறந்தப்
பிறகு எங்களுக்கு எழுதப்படும்
தலையெழுத்து
(எத்தனாவது முறை என்று EC ல கேட்டுக்கோங்க)

இதன் பிழைகள் அடுத்த
ஐந்தாண்டில் திருந்தும்
என்ற கனவோடு
(நம்பிக்கை இல்லை கனவு)



Tuesday, April 12, 2011

இந்தத் தேர்தல் - மாற்றம் கொண்டு வருமா?


மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பாம்...
தீர்ப்பை சொல்லப்  போவது
ஓட்டுக் காகிதமா...பண நோட்டுக் காகிதமா 
இதோ முடிவு நெருங்குகிறது

தன் தலைஎழுத்தை
மாற்றத் தெரியா
ஆறறிவு மாக்கள் கூட்டம்
நாட்டின் தலைஎழுத்தை மாற்ற

200 ரூபாயில்
உயிர் நிகர் உரிமையை
மக்களாட்சி என்பதற்கு
எஞ்சி இருக்கும் ஒரே சாட்சியம்
ஓட்டுரிமையை
வியாபராம் செய்யும் மனசாட்சி
(பெரிய மீனை பிடிக்க போடும் சிறிய  மீன்கள் )

49 -O ஆம் , அசோகச் சின்னமாம்
சோம்பேறி அரசியல்வாதிக்கு
படுத்துறங்கும் பஞ்சனையை
பணத்தால் எவன் தருவானோ
அவன் கட்சி கூட்டணியில் ஒரு உல்லாசப் பயணம்
பின்பு பணம் கொஞ்சம் குரையையிலே
அவனையே எதிர்த்து ஊர் போராட்ட முழக்கம்
பணக் காகித அனணக்குள்ளே
மனித மனம் கட்டுண்ட விந்தை என
தேர்தலும் ஓட்டும் விளையாட்டகிப் போன
அவலம்

என் முதல் ஒட்டு இந்த ஆண்டு
மாற்றம் கொண்டு வரும் இந்த தேர்தல்
என்ற நம்பிக்கையுடன்







Saturday, April 9, 2011

பாவி

உலகில் மிகப்
பெரிய பாவம்
எது தெரியுமா...
தாயிடம் இருந்த சேயை பிரிப்பதல்ல
இதோ உயிர் உடலகிப் போன
நட்பை பிரிப்பது தான்...
அப்படி பார்க்கையில் இதோ
இந்த காலம் தான்
உலகின் மிகப் பெரிய
பாவி 

அண்ணா ஹசாரே...சேற்றில் முளைத்த செந்தாமரை

 
பசி மறக்காமல்,
தினம் தினம்
மக்களின் உயிர் குடிக்கும்
மக்களாட்சி வாரிசு
லஞ்சம் 

இங்கே அன்னம் மறந்த ஓர் அண்ணா

உவமைகளாய் வந்த
சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை
தீபம் கீழ் நோக்கி எரிவதில்லை
ஆனால்...
மெல்ல எங்கள் அரசியலின்
போக்கு திசை மாறுகிறது...
விசை மாறுகிறது ...
மக்களுக்காய்

Thursday, April 7, 2011

தேர்தல்


நெல்ல விதைச்சு அள்ளிபுடலாம்
ஆனா விதைச்சு புட்ட சொல்ல
அள்ள முடியாதம்...
எவன் சொன்னான் முடனே...

பார் இந்த
தமிழக அரசியல் அறுவடைகளை...

பொய் பேசும் சொல் விதையாக்கி
அதற்கு நம்பேய் உடலை உரமாக்கி
இலவசம் என்னும் கைகொண்டு
இலவசமாய் பறித்துப் போகிறான்
நம் சுவாசத்தை ... சுதந்திரத்தை...
இதற்கு பெயர் மக்களாட்சி

Tuesday, April 5, 2011

Dedicated to Mepco EEE A 2007-11

ஏழு வண்ணங்கள் சேராமல்
வானவில் ஏது?
65 உயிர் ஓருடலில் சேராமல்
இந்த இனிமை நினைவெது    

சுகமான நினைவுதான்
இருந்தும் சுமையாக இருக்குது...

தாய் கருவை பிரிந்து
தன்னுலகை காண வந்த
சேயை போல நானும்
இன்று பிரிகிறேன் என் நட்பினை
இதோ சுயநல உலகை காண...


வரும் நாளில்
என் செல்லமகன்
முத்தமிட்டு பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சொன்னாலும்
மை கலந்து குளிப்பாட்டி...
செல்ல அடியால் புத்துயிர்
ஊட்டிய அந்த 12 மணிக்
கொண்டாட்டங்கள் திரும்பிடுமா?

நுனி நக்குத் தொடங்கி
அடித் தொண்டை வரை
சுகம் பரப்ப...அருமை மனைவி
சமைத்துப் போட்டாலும்...
ஒரேத் தட்டில் பாய்ந்து உண்ட
விடுதி பூரி போல் சுவைத் தருமா?

புன்னகைக்கு ஒன்று
கண்ணீர்க்கு ஒன்றை
நிறம் மாறி பகிர்ந்து கொள்ள 
துணை நிற்கும் என் தோழமை போல்
அவன் தோள், மடி போல் 
சொர்கத்து பஞ்சணையும் சுகம் தருமோ?  

கிறுக்கல்களை ஓவியம் என்றும்
புலம்பல்களை கவிதைகள் என்றும்
முனங்கல்கள் எல்லாம் பாடல்கள் என்றும்
பொய் சொல்லியாவது எனை
ஊக்குவிக்க இனி எவன் வருவான்?

வலிதந்த முதல் காதல்,
வழிதந்த CTS ,
வாழ்கை சொன்ன தோழமை,
உயிர் இல்லாமல் உடலை வாழச்
சொன்ன காலம்
கண்ணீரால் நட்புக்கு புது
உயிராசனம் எழுதிய farewell என
மெப்கோ ஒரு விசித்திர அனுபவம்....

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்