Friday, December 31, 2010

2011- புதுமுகம்

போராட்டங்கள், முயற்சிகள்
சிந்திய வியர்வைகள்
ஜெயமாக வேண்டும்
பூஜ்ஜியங்கள் ஒன்றாக வேண்டும்

நிச்சயம் என நிறுபித்தது
    2011
வாழ்த்துக்களோடு உங்கள் தோழன் JAM 

காரணமும் காதலும்

எரிவது எதற்கென்றே
தெரியாத முட்டாள் சுடமல்ல
நவீனக் காதலர்கள் ...
மெழுகுவர்த்திகள் !
உருகி வடிகிற ஒவ்வெரு
கண்ணீர் துளியிலும் இருக்கிறது
காரணமும் காதலும்

Wednesday, December 29, 2010

ஈசன்

 உழைப்பாளியின் 
வியர்வை துவாரங்கள் 
சுரக்கும் குருதி வெள்ளம் 
வரி எண்ணும் 
வாய்க்கால் பாயாவிடில்
பூத்துக் குலுங்குமோ
அரசியல்வாதிகள் 
தமது வாரிசுக்கு கட்டிய கோட்டை சாம்ராட்சியம் 

(ஈசன் படம் சொன்ன ஞான மொழி)

யா(பா)ழான மனமே

யாழிடம்
இசை திருடிய
விரல்கள் அனுமதி
கேட்டதில்லை ...
காதலிடம்
திருடுபோன
மனமும் அப்படித்தான்

Tuesday, December 28, 2010

மற்றொன்று


மனிதனை சுற்ற வைக்கும் 
காசும் காதலும் ஒன்று தான் 

இருமுக அரக்கர்கள் 
காதலின் இருமுகம் 
ஒன்று காயம் 
மற்றொன்று அதற்கான மருந்து

எனவே தான் உண்மை 
காதலர்கள் அந்த 
போதையில் மீள மறுக்கிறார்கள் 

Monday, December 27, 2010

?

முகில் இல்லா மழை போல
நெருப்பில்லா புகை போலக்


காதல் 

காற்றுக்குக் கூட
எளிதில் அணையிடலாம்...
இதற்கு?????

ஜாதி மதமில்லா விடுமுறை

இந்து பண்டிகை
இஸ்லாம் பண்டிகை
கிறிஸ்துவ பண்டிகை
மதங்கள் எங்களைப் பிரிக்கலாம்,
பிரித்ததை விடுமுறைகள் இணைத்தது...

நமது அரசாங்கம் 
பெருமை பட செய்யும்  ஒரே விஷயம் 
மதவிடுமுறைக்கு விடும் பொதுவிடுமுறை 

Thursday, December 23, 2010

எதைத் தேடி?



கரை இல்லாதக்
கடலுக்குள்...
படகின்றி பயணிக்கிறேன்!
எதைத் தேடி தெரியவில்லை

Wednesday, December 22, 2010

காசுநோய்


பணப் போதைக்கு
அடிமையனதேன்னவோ
அரசியல் தூண்கள் தான்...

அதன் பக்கவிளைவாம்
புற்றுநோய் வந்தாதோ
என் தாய் நாட்டுக்கு

ஜாதி தந்த சுதந்திரம்

காசாக பிறந்திருக்கலாம்
இன்று அது ஒன்றுதான்
ஜாதி தடை இல்லாத நாதி

அவள் வீட்டுக்குள்ளும்
கரங்களிலும் சுதந்திரமாக
சுற்றி வந்திருப்பேன் ...

வேறுபாடு

காமத்தின் பள்ளியில்
மூடனுக்குத்தான் பட்டங்கள்

காதல் போரினில்
விழ்பவனுக்கே மகுடங்கள் 

எரிமலை/மெழுகு

உன் நினைவை சுமக்கும்
என் நெஞ்சம் ஒன்றும்
எரிமலை இல்லை ...

நீ அணல் கனலாய் 
கோபப் பட்டதும்
உமிழ்ந்தெரிய...மெழுகடி 
உன்னை சுமக்க உருகவும் தயார்

என் புன்னகை

நகை மட்டும் தான்
செயற்கை என்று நினைத்தேன்

என் புன்னகையும்
செயற்கையானது ...
நீ தந்த நெஞ்சத்துப் பிளவால்

Tuesday, December 21, 2010

அபிநயா

அபிநயம்
பாரதத்தையே பேச வைத்த
ஊமை மொழி ...
உனக்கு பெயர் வைத்த
உன் பெற்றோர்
உண்மையில் வார்த்தை ஜலர்கள்

அப்பாவிப் பூக்களின் 
உண்மை மொழி 
மணம்...
பெண்பூவே உன்
உண்மை மொழி நடிபென்று 
கண்டறிந்தாய் 
அதன் உன்மௌனங்கள் கூட 
கோடி ரசிகர்களின் 
நெஞ்சங்களில் அதிர்கிறது 
அதிரும் 
பெருமை படுகிறேன் உன்னால் வசிகரிக்கப்பட்டதற்கு

Monday, December 20, 2010

பொய்த் தோல் போர்த்திய மெய்



என் உண்மைக் காதல்,
அதன் அருமை நீ
உணர எத்தனை பொய்கள்...
கவிதுவமானப் பொய்கள்
(காதலுக்கே உரிய சிறப்பு)

கண்டறியாதஅழகே!


நாசா கண்டறியாத
அழகே! அழகே!

பூமியில் வாழும்
இரண்டாம் நிலவே!

Saturday, December 18, 2010

வார்த்தைத் தேடல்

பௌர்ணமியில் தித்தித்க் கௌமுதியே (நிலா)
மிடுக்கால் மிளிர்ந் கௌசிகமே (பட்டு)
உண் தன்னடக்கம் புரியுது சகியே ...
இருந்தும் இவையெல்லாம் நீயே ...

காதலின் காலன்

காதல் அன்பின் வடிவம்

அந்த அன்பு எனக்கொரு
எதிரியை ஈட்டித் தந்தது ...

ஜாதி ... காதலின் காலன்

Friday, December 17, 2010

முதல் மலர்

முதல் மலர்
உதிர்ந்ததும் ...
அடுத்த மலரைக்
கருவில் சுமக்கக்
காத்திருக்கும்
பூச்செடியல்ல
என் மனம் ... எனக்கு ஒரேக் காதல் ...
மறந்தால் மறிப்பேன்...

Monday, December 13, 2010

பழிக்குப் பழி

நான் இன்று
உன்னால் சம்பலாகிறேன்...
நாளை என்னால் நீ!
மறவாதே!
...புகைப் பழக்கம்...

அவளும் புகையும்

அவளும் புகையும்
ஒன்று தான் ...
இனிக்கின்ற இதழ்
முத்தால் காயப்படுதிவிட்டர்கள்
என் இதழையும் இதயத்தையும்...

இதய விபச்சாரம்

இளமையின் சூட்டில்
பார்க்கும் பெண்ணிடமெல்லாம்
காதல் கொள்ளும் இளைஞனே
அதன் உண்மை பொருள்/பெயர்
எது தெரியுமா?


இதய விபச்சாரம்

காதல் ஜாதி

அரசியல்வாதிகளே!
காதலித்துப் பாருங்கள்
அப்பொழுதாவது இந்த
ஜாதியின் கொடுமையினை
உணர்ந்து எதிர்கிறிர்களா
பார்போம்...

Saturday, December 11, 2010

அழிக்கமுடியாமல்

இரு உயிரை
அரைத்துப் போட்டு ...

எவோனோ!
இளமையின் வாசலில்
போட்டக் கோலம்
காதல்...

மழை நீரே இதை
அழிக்கமுடியாமல் தோற்கும் ...
ஆனால் இந்த சமுக மூடர்களுக்கு மட்டும்
இது இன்னும் புரியாமல் துடிப்பாதேன் ...

வசிகரிக்கப்பட்டேன்

1) மாயம்
2) இறப்பில்ல வாழ்கை
3) ஈருயிர் ஓருயிர் ஆதல்
4) விண்ணில் பறப்பது
........இப்படியே நீளும்
இந்தப் பட்டியல் ...
காதல் ஒரு சூனியம்
என்பதற்கான சாட்சிகள் ...
நானும் அதில் வசிகரிக்கப்பட்டேன்...

கண்ணறியா விருட்சம்

விதைத்தவன்
அறியாத மலக்காட்டு
மரம்போலக் காதல் ...

எவன் விதைத்தான்
தெரியவில்லை ...
என் நெஞ்சில்
வேர் விட்டு படர்ந்துள்ளது...

ஆசைக் கனவு

கனவுகளில் மட்டும்மென்
காதல் வெற்றியடையும் பொது
அந்த இறைவனிடம்
நான் வேண்டும் ஒரே பொருள்
என்னைக் கனவிலே
சிறை வைத்து ...
இதை நனவாக்கிடு ...

கோ(கா)ல(த)ம்(ல்)

புள்ளிகளும்
கோடுகளும்
இணைந்தால் தான்
கோலம் உருவெடுக்கும்...

புள்ளியாய் நான் இங்குத்
தயாரடி ...
உண் காதல் கோடுகளால்
வலைத்திடவா ...
வாழ்க்கைக் கோலம் நாமிடுவோம் ...

அழகு

அழகு ...
வர்ணிக்க முடியாத,
வார்த்தைகளில் அடங்காத
விசித்திரம் ...

பார்ப்பவன் கண்களில் தான்
அதன் உண்மை பொருள்
இருப்பதை அறியாத
மனிதக் கூட்டம் ...இங்கே

அதன் விசித்திரம் ...
"அவனவன் கண்களுக்கு
அவனவன் காதலித்தான் அழகு"
என்ற ஒற்றை வரிகளில்
அடங்கிடும்  விந்தை ...

Thursday, December 9, 2010

செல்லாதவை!

என் நெஞ்சத்து உண்டியலில்
சேர்ந்த உண் நினைவுச் சில்லறைகளை
செலவழித்து, உன்னை மறந்திட நினைத்தேன்...

அவைகள் செல்லாதவைகளாகி 
என்னை விட்டு செல்லாத சுமைகலானது ...

Wednesday, December 8, 2010

எழுதுகோல்

எலும்புள்ள
எனது இரண்டாம்
நா! கைகள் கொண்ட நா!

உதடுகளின்றி
ஊமை வார்த்தைகளால்
உரக்க பேசுவான் ...

தவிக்கிறேன்

வேர்கள் இல்லா
விருட்சம் போல
ஒரே இடத்தில்
முடங்கிக் கிடக்கிறேன் ...

உன் உதடுகள் வீசிய
சவுக்கடியிளிருந்து
மீண்டு எழத் துடிக்கிறேன் ...

Tuesday, December 7, 2010

வார்த்தை பிறலான்

என் எண்ணங்களை
காகிதக் கற்களில் 
கல்வெட்டக்கும் உளி ...

நான் சொல்வதை ...பிறரிடம்
வார்த்தை மாற்றாமல்,
பொய்கள் பூசாமல்
சொல்லும் ஒரேத் தோழன்...

தாகம் தீர்ந்ததா? தீர்த்தீரா?

பாலையின் தாகத்திற்கு
இளநீர் கிடைத்தது போல்
இரண்டாம் காதலை
சுமக்கும் காதல்
கற்பவதிகளே...


எனது ஒரே கேள்வி
வயிறுமுட்ட...
நாவில் தேனிட்ட
தாய்பால் காதலைவிட 
இளநீர் அவ்வளவு
சுவையா? 

Sunday, December 5, 2010

தவறு








கன்னிவெடி பதுங்கி
இருப்பது என்னவோ,
உண் கண்களில் தான் ...
ஆனால் வெடித்துச் சிதறுவது
ஏன் என் நெஞ்சம் ?

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்