Sunday, September 30, 2012

சேவல்கள் நல சங்கம் - 1

முன்குறிப்பு- தலைப்பிலிருந்து தரை வரை இது படிக்கும் பெண்களுக்கு கருத்து வேறுபாடாய் தெரியலாம் (தெரியும்)... வேறுபாட்டை கருத்தில் சொல்லுங்கள் விவாதிப்போம்.
மாதர்  குலமே!
இன்னுமொருமுறை இன்னுமொரு ஆணை 
வரதட்சணை குற்றவாளியாக்கும் முன்பு 

நகைக் கடைகளில் வீசிதீரும் 
பெருமூச்சின் காரணம் சொல்லிவிடுங்கள் 
அடுக்கி கிடந்து தூசி படியும் 
பட்டு புடவையின் தேவை சொல்லிவிடுங்கள்

ஆண்கள் நாங்களும்  எங்கள்
குற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம்

ஏழு இலக்க பேங்கு பேலன்சு
எடுப்பு  வேலைக்கு ஆளு
ஏக்கர் கணக்கில் சொத்து
எளிமையா ஒரு வீடு
என்று எதுவுமே பெண் வீட்டார்
மாப்பிள்ளையிடம் எதிர்பார்ப்பதில்லை
என்றொரு வாக்குமூலம் எழுதி தாருங்கள்

நானே பெண்வீட்டில் வாங்குபவனை
செருப்பால் அடிக்கிறேன்...

உன்(ங்கள்) மாமியார் வாங்குகையில்
தவறென்று பேசிய நியாயம்
உன் அண்ணனின் திருமணத்தில்
உன்னை பெற்றவள் பட்டியளிட்டு
எங்கே போயிற்று
உன் தம்பிக்கு பெண் பேசுகையில்
"எனக்கெல்லாம்  எவ்வளவு செஞ்சா எங்க ஆத்தா"
என்று பீற்றுகையில் எங்கே போயிற்று
என்பதற்கு மட்டும் விளக்கம் தாருங்கள்

ஆண்கள் நாங்களும் எங்கள்
குற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம்

வராத வரதட்சணைக்காய்
வெடிக்கப்பட்ட காஸ் சிலிண்டர்பற்றி
கவலை படும் உலகமே
வாங்க முடியாத வைர  நெக்லசுக்காய்
விவாகரத்து வழக்கு பார்த்த மனுக்கள்,
ஆண் முகம் பேத்தெடுத்த
பூரிகட்டைகள் பற்றி யாருக்கு அக்கறை

 பின்குறிப்பு:
1) இதை யாரையும் காயபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல
2) ஒரு மாணவனின் பார்வை. விமர்சாக ஆசிரியர்கள் என் கருத்தில் தவறு கண்டால் போருத்தருளூமாறு கேட்டு கொள்கிறேன்.
3) இனி இந்த சேவல் நல சங்கம் ஆண்களுக்காய் குரல் கொடுக்கும்.

Friday, September 28, 2012

நாங்கள் விற்பனைக்கு

உலக சந்தையில்
உடலெல்லாம் விற்பனைக்கு
 .
திருமண மண்டிக்குள்
நீ நுழைந்தால்
100 பவுன் தள்ளுபடியோடு
பூக்கள் விற்கக் கிடக்கும்
 .
கல்லூரி கோடோவ்னில்
தினம் நீ பார்த்தால்
விற்று தீரும் மூளைகள்...
நல்ல இளசை புது புது தினுசாய்
தனியாய் விற்பனைக்கென்று 
கடைகள் தேவை இல்லை
தெருவெல்லாம் விலை பொருள்
தன்னை தானே விற்க  
விளம்பரம் செய்து திரியும்
 .
ஒரு இஞ்சுக்கு முகப்பூச்சு
காரக்குழம்பு கொட்டிய ஹேர்ஸ்டைலு
ஒன்னே முக்கால் அடி செருப்பு
மறைக்கப்படவேண்டியதேல்லாம் காட்சிக்கு
நுனி நாக்கில் ஆங்கிலம்
அவனி(ளி)டம் இல்லாத அது என்னிடம் இருக்கு
என்று எல்லோரும் 
தன்னை தானே விளம்பரம் செய்வது 
முற்றிய கத்திரிக்காயையும் 
சந்தையில் விற்றிட முயலும் முயற்சிதானே 
விற்று தீருங்கள் உங்களை நீங்களே  

Wednesday, September 26, 2012

செத்தவன் பேசுகிறேன்

அழுதால்  கண்ணீர் வருமென்பது
காயங்கள் வலிக்குமென்பது
உயிர்இன்றி மரணமென்பது

இப்படி உயிர் வாழ்ப்பவரின்
எல்லா விதியும்
கடந்து(மரணித்து)விட்டேன்...

=O=O=

மறுத்த பிறகும் நம்பிக்கையில்
வலிக்கும் என் காதலை
டிராப்ட்டில் வைத்திருக்கிறேன்.
மீண்டும் அனுப்பும் வரை மரணம்...
இல்லை என்று தெரிந்த பின்பும்
எனதே என்ற நம்பிக்கையில்
உன்னை வைத்திருக்கிறேன்
கிழிந்த காகிதத்தில் கிழிக்கப்பட்ட இருதயத்தில்.
தூர எரியும் வரை மரணம்...

=O=O=

இன்று தான் அவளை
முதலில் பார்த்தேன்
இன்று தான் நானும் அவளும்
ஒரே வண்ண உடையில் வந்தோம்
இன்று  தான் என் காதல் சொன்னேன்
இன்று  தான் என் காதல் கொன்றாய்

365 நாளும் என் நாட்காட்டியில்
கிழிக்கப்படுவது தேதியாக இருந்தாலும்
கிழிபட்டு சாவது நானாகவே இருந்தேன்...

=O=O=

"எப்படி இருக்க" என்ற
தோழனின் கேள்விக்கு
உயிரப்பேதும் இல்லாமல்
சிரித்து வைக்கும் உதடு...

ஒ(வ்வொரு)ரு முறையும்
என்னோடு சேர்த்து கண்ணீரையும் 
கொலை செய்தேன்...

=O=O=

கையளவு இருதயத்துள்
கையடங்கா கண்ணாடி துண்டு போல்
உன் நினைவு.. என்னுள்ளே
சுவாசிக்கும்  நொடியெல்லாம் மரணமடி

என் தலையணை குடித்த
கண்ணீரை அலசிப் பார்
என் இரவுகளின் நீளத்தில்
என்னோடு கிடந்து பார்
நான் எழுதும் காதலை
கொஞ்சம் மொழி பெயர்த்துபார்

என் கடவுச்சொல் திருடி
என் மின்னஞ்சல் ஒருமுறை திறந்து பார்
எங்காவது நான் செத்து கிடப்பேன்...

"நான் உன்னை காதலிக்கவில்லை "என்றது 
அவள் எனக்கு கொடுத்த ஆயுள் தண்டனை
நான் இன்னும் அவளை காதலிப்பது
நானே எனக்கு கொடுத்துகொள்ளு[ல்லு]ம்
மரண  தண்டனை

பின்குறிப்பு - குண்டூசிகள் மீது படுத்துறங்கும் காதலுக்கு சமர்ப்பணம்...

Tuesday, September 25, 2012

அசிங்கத்தின் வீச்சம்

ஒரு சாண் பசிக்க
நோய் தாயை நசுக்க
இளையாள்  கணவன்
வரதட்சனை என யாசிக்க
சிகரெட்டு சூடு இம்சிக்க

எதோ  ஒரு காரணம்
எத்தனையோ கட்டிலில்
இரையாக்கிய அவளின் பெயர்
தே***** என்றால்

அறிப்பெடுத்த  பொழுதுகளில்
சொறிய தேடும் கையாய்
ஆ(பெண்)ணை ஆ(பெண்)ணும் தேடி
காதல் நட்பென்ற புதர் மறையும்
அசிங்கங்கள் என்னவென்பது?

=O=O=

கண்ணகி பேத்திகளே
மார் மறைக்க வேண்டிய துப்பட்டாவை
கழுத்தில் சுற்றி வந்துவிட்டு
குனிகையில் நிமிர்கையில்
முன்னிருப்பவனை முறைப்பதிலில்லை
உங்கள் கற்பு

ஆண்களின் கண்
காய்ந்து  போன மாடுதான்
ஆனால் மலம் தின்னாது என்றும்....

=O=O=


அனுபவிக்க மட்டுமல்ல,
இளமை அனுபவம்  சொல்லவும்
சம்பளத்திற்கு மட்டுமல்ல,
கொஞ்சம்  வேலை செய்யவும்
கால் நனைக்க மட்டுமல்ல,
கடற்கரைகள் மனம் கழுவவும்

ஆனால்,
அதை அதை
அங்கங்கு  செய்வதும் இல்லை
செய்யவிடுவதும் இல்லை
காதலித்து மட்டும் தான் தொலைகிறார்கள்

காதலிப்பவர்களை கூட மன்னித்திடலாம்
காதல்  என்று சொல்லிவிட்டு
சண்டை இடுவது
சேட்டை செய்வது
அடுத்தவன் வயிற்றில் நெருபிடுவதுமாய்...

பின்குறிப்பு :

இவைகள் 
முகர்ந்து பார்க்கப்பட்ட
அசிங்கத்தின் வாசம் அல்ல 
நம் சுவாசத்தை 
இம்சை செய்யும்வீச்சம்



Sunday, September 16, 2012

நானொ(மொ)ரு கோழை


130 likeகளுடன்  அசிங்காமாய் இருந்த 
அவள்களின் புகைப்படம் கீழ்
nice cute என்றிருந்ததெல்லாம் 
பொய் என்று சொல்லாமல் வந்திருக்கிறேன்

அவள்களிடம்  நல்லவனாக பேசி
தூரத்தில் பார்க்கையில் 
தொங்குது குலுங்குது என 
வாய்கூசத நச்சுபாம்பை பார்த்தும் 
ஒன்றும் செய்யாமல் வந்திருக்கிறேன் 

இந்தியாங்ரதாலதான் இப்படி
இதுவே அமெரிக்காவா இருந்தா என்றுவிட்டு
பொது இடத்தில் புகைத்தவர்களை
காலியான பிஸ்கட் பாக்கெட்களை
ரோட்டிலேயே எறிந்தவர்களை
பார்த்தும் பொருத்திருந்திருக்கிறேன்

நான்கு வருடங்கள்
kozhiyin century dhoniyin helecopter
என்று  புலம்பிவிட்டு; பணத்தை
அவன் பாதத்தில் குவித்துவிட்டு
நான்கில் ஒரு வருடம் மட்டும்
இந்தியா தத்தி மச்சி
ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் இல்லை
என்றவரோடு தலை ஆட்டியதுண்டு

என்னிடம் லஞ்சம் வாங்குபவன் 
என்னை  அதட்டி கேட்கிறான்?
தரமில்லாததை  தந்துவிட்டு 
தயக்கமின்றி விலை நிர்னையிக்கிறான்
தெருவில்  குப்பை  போடுபவன்
தைரியமாய் போடுகிறான் 
விவாசாயி  விளைவித்ததை 
அவனுக்கே அதிக விலைக்கு விற்கிறான்
ஒட்டு கேட்க மட்டும்
என்  வீடு தேடி வருகிறான்
தப்பு செய்பவன் எல்லாம் 
தைரியமாக திரிகிறான் திரிய விடுகிறேன் 

இப்போ சொல்லுங்க 
நான்(ம்) கோழைதானே?

இன்னும் எதற்கு சம்பாதிக்கிறேன்

இன்னும் எதற்காக
என் இந்த ஓட்டம்

திண்டிவனம்  தேடியும்
சோழிங்கநல்லூர் சலித்தும்
மூழ்க்காத மடிப்பாக்க மிச்சத்திலும்
நான் தேடும் "Sweet Home"
எட்டா லட்சங்களாய் கிடக்கிறது
என் கை இருக்கும் சொச்சங்களோ
செல்லாத காகிதமானது

இந்தியா வரும் எண்ணெய்
பேரல்கள் மட்டும் விலை அதிகமாம் 
முதலாளிகள் கோடிஸ்வரராயிருந்தும்
கம்பனிகள் நஷ்டத்திலாம்
பெட்ரோலும் சொந்தக்கரும்
கனவான போதும் சிரிக்கிறேன்
இன்னும்  சொந்தக் காலால்
நடப்பது  இலவசமாக இருப்பதால்

காய்கறி பலசரக்கு
ஆடை அடிச்சு போடும் வரி
தண்ணீர் வீட்டு வாடகை
பாலூற்றிடும் பால் தங்க விலை
என  எல்லாம் போட்டி போட்டு எகிறுது...
எ(ன்)ங்கள் சம்பளத்தைத் தவிர

அனாவசியம்  என்றிருந்ததெல்லாம்
அவசியம் ஆகிப்போனது தேவையால்
மனிதனின் ஆசை என்றிருந்ததெல்லாம்
பேராசை ஆகிப்போனது விலையால்

மாடாய் என்ன?
பேயாய்  உழைத்தும் கூட
professional tax, pf போக
எஞ்சிய சம்பாத்தியம்
வீட்டு லோன் டியூவுக்கே தட்டி நிற்குது

செல்லாத காசை சம்பாதிக்கிறேன்
சொல்லாத ஆசைசுமந்து திரிகிறேன்
இன்னும் எதற்காக
என் இந்த ஓட்டம்...

Wednesday, September 12, 2012

காதல் எனக்கு வேண்டாம்

அது என்ன கண்ணா
இல்ல  அம்மிக் கல்லா?
வச்சு நெஞ்ச அரச்சுபுட்டா

அவ பொண்ணா
இல்ல கண்ணி வெடியா
இருதயம் பூர பதுங்கி கிடந்து
அப்ப  அப்ப வெடிக்க வச்சா

அவள், என் நரம்பெல்லாம்
ஓடும் கண்ணாடி கரைசல்
விதையின்றி அவள் விளையும் 
நான்  காதலின் கரிசல்

அவள் புகைப்படம் என்
இமையுள் முளைத்த முள்
என் இரவிடம்
இனி உறக்கங்கள் இல்

பூவுக்குள்ள தேனா
காதல் நெஞ்சுக்குள்ள
வ(ம)ண்டு அவளாய் குடிக்காமல்
நானாய் எங்க சொல்ல

சொல்லாத காதல்
அது தாளாத பாரம்
சொல்லி  அவளிடம்
செல்லாமல் போனால்
இங்கு ஆறது காயம்


அதிகம் ஆசை படுபவனல்ல


ஜோடியாய் நிலவொளி  குளியல்
உறங்காமல் பேச்சு
கெஞ்சி கொஞ்சி முத்தம்
அப்ப அப்ப ஊடல்
அவளாய்  குளிரும் கூடல்
எதுவும் வேண்டாம்...

என் இருதயத்துள் இல்லனாலும்
நான் பார்க்கும் தூரத்தில் அவள்
அதிகம் அவள் பேசலன்னாலும்
எதோ ஒன்றிரண்டு குறுஞ்செய்தி
அவளை காதலிக்க முடியாவிட்டாலும்
அவள் புகைப்படத்தையாவது காதலித்துவிட்டு  போகிறேன்

சொல்லி இருதலையும்
செத்து போவதற்கு
சொல்லாமல் ஒருதலையாய்
என் காதல் வாழ்ந்த்து விட்டு போகட்டும் 

பின்குறிப்பு - சொல்லாமல் காதலிப்பவர்களின் கோழைத்தனத்திற்கு சமர்ப்பணம்

Tuesday, September 11, 2012

அணு அணுவாய்... கூடங்குள சித்திரவதை

இரும்பு கோட்டைக்குள்ளே
இத்துனுண்டு அணுவத்தான பிளக்கான் ...
உனக்கும் சேத்துதான மின்சாரம் கொடுக்கான் ...
அறிவியல் புரட்சி செய்து
உன் இந்தியாவ தான வளக்கான்...
அப்புறம் எதுக்குளே இத்தனை எதிர்ப்பு
... இது ஐந்தை புறந்தள்ளிவிட்டு
பகுத்தறிவதாய் அறிந்தாய் சொல்பவர்.

லட்சம் பேரு எங்கள
பிறந்த மண்ண விட்டு போக சொல்வ
குளிர்வித்த நீர் கழிவோ
அணு  பிளந்த ஆபத்து கழிவோ
கொண்டுவந்து கொட்டி
எங்களுக்கு உணவிட்ட கடல கொல்வ
... இது ஆறறிவு  எதுவுமின்றி
அழிவை  உணர்ந்தவர் சொல்வது...

அலட்சியம் ஆபத்து அரசியல்
அழுகை பயம் கோபம் என்ற
புகைக்குள் முச்சு தினறிகிடக்கிறது கூடங்குளம்
நீ நான் நாம் இங்கே வாழும் 
உல்லாச வாழ்விற்காய்...

கால் பைசா பெறாத கண்டவளு(னு)டன்
கடலை என்று கணநேரமும் தொலைபேசி
கரண்டை கரியாக்கியதுண்டா?

யூனிட்டு வெறும் அஞ்சுதானென்னும்
மீட்டர்  தான் பழுதாச்சேன்னும்
அலட்சியத்தில்  அணைக்காமல்
விளக்கோ விசிறியோ விட்டதுண்டா?

மார்கழி குளிரோ பங்குனி வெயிலோ
வெப்ப  மரக் காத்திருக்கு
வாங்கி வர தேக்கு மாற சன்னலிருந்தும்
ஏசி போட்டு போர்வைக்குள் உறங்கியதுண்டா?

ஐஞ்சு தட்டு தின்னு நல்ல கொழுத்திருந்தும்
ரெண்டு மாடி ஏற இயலாத உன்னால்
மின்தூக்கி  தூக்கிவிட்டு தான் தினம் ஏறுவதுண்டோ?

மண்பான நீரிருக்க புதுசாக காய் இருக்க
குளிரில் கிடந்த பழசு தான்
வேண்டுமென்று உண்டதுண்டா?

அடுத்த தெருமுதல் ஆளுடன் பயணமுன்னு
பெட்ரோலா விரையாமாக்கியதுண்டா?
குனிந்திடசோம்பலாகி நல்லியைஅடைக்காமல்
நீரையும் சீரழித்ததுண்டா?
அவள் எவனுடன் ஓடிப்போகிறாள்
என்ற நெடுந்தொடரின் ஆர்வத்தில்
அடுப்பு எரிவாயுவை வீனாகியதுண்டா?

மின்தட்டுபாடிடம் இடிபடுவதுமட்டுமல்ல
அங்கே அவர்கள் அடிபடுவதற்கும்
அவர்கள்  ஊர் அழிவதற்கும்
காரணமும் நாம் தான் ...
உன்னால் உண்டான இந்த அவலத்தை
இத்தனை லட்ச நிவாரணம் துடைக்க போவதில்லை...


பின்குறிப்பு - என் அணு உலை வேண்டமேன்கிறோம் என்கிற கூடங்குளத்தாரின்  இந்த 13 காரணங்கள் என் நெஞ்சில் முள்ளா குத்துச்சு... அதில் வடிந்த வரிகள் .

Monday, September 10, 2012

இனி சல்வார்தான் அணிய போகிறேன்

இனி சல்வாரோ சேலையோ தான்
அணிந்து கொள்ள போகிறேன்...
பாதம் தொடும் சடையிட்டு
சரம் சரமாய் மல்லிக்கப்பூ
வைத்துக்கொள்ள போகிறேன்

புடவை சுற்றிய கல் போதும்
முடியாது என்றிருந்ததெல்லாம் முடிந்திருக்கும்

அவர்கள் மத்தியில்
இனி சல்வாரோ சேலையோ தான்
அணிந்து கொள்ளப் போகிறேன்.

நான் கேட்கவேண்டிய அவசியமில்லை
இனி எல்லாருக்கும் நிச்சயமாய்
நான் தேடும் கேள்வியின் பதில் தெரியும்
ஒரு நாள் கூட சிரிக்காதவனுக்கெல்லாம்
முப்பத்திரண்டு பல் தாண்டி எகிறு கிழிந்து
முப்பத்திமூன்றாவதும் வெளி தெரியும்
இனி நான் அழைத்தால்
காப்பி சாப்பிட நேரம் இருக்கும்
எனக்கும் சேர்த்து பிரியாணிக்கும் காசிருக்கும்
இனி  நான் எது செய்தாலும் சரியாக இருக்கும்

எவன் எதை பார்க்கிறான் என்றறியாமல்
பகுத்தறிவு இழக்கும் அவள்களின் தேசத்தில்
அவர்களை அதை மட்டுமே பொருட்படுத்தி
மற்றவரை உதாசீனப்படுத்தும் அவன்களின்
மத்தியில் பிறந்து தொலைத்து விட்டேன்


எனவே!
இனி  சல்வாரோ சேலையோ தான்
அணிந்துகொள்ள போகிறேன்
பசிக்காக தின்னலாம்
ருசிக்காக தின்னலாம்
பார்ப்பதை  எல்லாம் தின்றால்?
அப்படி தின்பவர் மத்தியில் பிறந்துவிட்டேன்
எனவே!
இனி  சல்வாரோ சேலையோ தான்
அணிந்துகொள்ள போகிறேன்




Wednesday, September 5, 2012

MAKEUP போட்ட கவிதை


ஓவியம் ஓவியன் வரைந்ததாகவே
இருக்கும் வரை தான் அழகு...
தனியாய்  சிங்காரம் செய்யாதவரை
தான் பெண்ணும் சிங்காரி...

உன்னை அசிங்கமாக்கும் அதற்கு

அலங்காரம் அழகு சாதனம் அழகு நிலையம்
என்று எவனடி பெயர் வைத்தான்...

சீதை நாணேற்றி
ராமன் நான் சிறை வீழ்ந்தேன்
என்று  என் பேனா பேசி இருக்கும்

அந்த கிறுக்கு சிறுக்கி விரலில்
இறுக்கி பிடித்த நூலிடம்
உன்  புருவக் கூந்தல் அறிபடாமல் இருந்திருந்தால்

மஞ்சள் கரிசாலை சாறெடுத்து
வெள்ளைத்துணி நனையவிட்டு
நெய்விளக்கில்  எரியூட்டி
விளக்கெண்ணெய் விட்டு குழைத்து
கள்ளி  நீயும் பூசி வந்தால் போதுமே
இந்த மாமன் நெஞ்சு களவுகொடுப்பேன்

அதை  விட்டு பங்குனி மாச
மச்சு வீடு மாதிரி இமைஎல்லாம்
இம்புட்டு  பூச்செதுக்கு?
சும்மாவே பெண் தினம் அழுவாள்
இதில் கண்ணுக்குள் ரசயான மையெதுக்கு

உன்  உதடு சாயமிறங்கி போயிருந்தால்
இனி எனக்கு சொல்லி அனுப்பு
முத்த முறையாலே முழுக்க சாயம் தாரேன்
அமுதுண்ணும் உதட்டில் விசத்துண்டு
எதற்கு உரச வேண்டும்

ஆயிரம் கறை இருந்தும்
அம்புலிய அழகில் மிஞ்ச ஆளேது?
அந்த  ஒற்றை பருவால்
நான் கொண்ட காதல் மாறது

தெரிந்தும்  ஏனடி...
எனக்கு காதல் தண்டனை கொடுத்த
உன் முகத்துக்கு வேதியல் தண்டனை...


இன்றொருநாள் அழகென்று
நீ பூசும் விஷமெல்லாம் நாளை விடியுமுன்னே
விஷமம் காட்டும் வேண்டாம்...

சிங்காரித்து  வந்த அழகாலே
என்னை  நீ இம்சிப்பாய்
நீ சிங்காரிக்க ஆராய்ச்சி என்று
அவர்களோ எலி முயல்களை இம்சிப்பார்கள்

இதெல்லாம் தேவையா?
நான் தேடும் அழகெல்லாம்
முகத்தில் அல்ல அகத்தில்...
என்  காதலை உள்ளே அனுப்பு
தன்னால் உள்புறம் அழகாகும் எனக்கானது போல்...


தொடர்புடைய  பதிவு - ஹைஹீல்ஸ் பற்றி 

பின்குறிப்பு  - கண்மை தயாரிக்க இன்னும் பல வழி இருக்கிறது. நான் சொல்லியது ஒரு வழி. 

Tuesday, September 4, 2012

காதல்(கள்) வலிக்கவேயில்லை

அன்றொரு நாள் 

ஜெனிபர் சொல்லி போனாள்
அவள்  அவனை காதலிப்பாதாய்
நிலா சொல்லி போனாள்
அவன் தான் பணக்காரன் என்று 
 செல்வி  உதறிப்போனாள்
முறை மாமன் அரிவாள் முறைக்குதென்று

அதில் எதுவுமே வலிக்கவேயில்லை

பின்னொரு நாள் 

ஸ்வேதா தூக்கி எறிந்தாள்
என்னை விட அவன் அழகென்று 
பிரியா இருதயம் உடைத்தாள்
நாம்  வேறு சாதி என்று 
பாத்திமா முறைத்து போனாள்
நாங்கள் வேறு மதம் என்பதால் 

இன்னும்  பலக்காரணங்கள் பலரால்
சொல்லி என் காதல் சாகடிக்கப்பட்டது

அதில் எதுவுமே வலிக்கவேயில்லை

உன்னிடம் கூட காதல் சொல்ல 
பயமே இல்லை ... இதை  தாண்டி 
நீ என்ன சொல்லிவிடுவாய் 

சொன்னாலும்  
காதலிழந்தவர் எல்லொரும் அதிகம்
சொல்லும் பொய்யைத்தான்
நானும் சொல்லுவேன்...

எனக்கு வலிக்கவே இல்லை...

பின்குறிப்பு - 
1. இந்த கவிதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே 
2. பொண்ணுங்க பெயர் யோசிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. எனவேதான் ஆறு காரணம்

இவர்கள் பிச்சை எடுப்பதில்லை


நல்லாதன உடம்பிருக்கு
உழைத்தால் என்ன?
படிக்கும் வயதில் 
பிச்சை எடுக்கிறாயா?
.
உனக்கு அமைந்தது போல் தான் 
எல்லோர் வாழ்க்கையும் என்ற நினைப்பில் 
முனங்கி போனயாமே? அன்று பிச்சை 
எடுத்திருந்தவர்களை பார்த்து...
.
இன்றெல்லாம் அவர்கள்
பிச்சை எடுப்பதே இல்லை...
.
அழகாய் அடுக்கி வைத்து
வரியோடு கொடுத்தால் உடசல்களையும்
அடுக்குமாடி கட்டிடமாய் இருந்தால்  
ஆண்ணாச்சி சொல்லும் பொய்யை
ஏசி அறையில் கண்ணாடி குடுவையுள்ளே
முந்தா நாள் பழசையும் 
வாங்கும் நாம் இருக்கும் ஊரில் 
.
இவர்களை நம்பி முதலீடு
செய்யப்படுவதோ...
.
ரீமொட் கவரும் ஐம்பது ரூபாய் பர்சும்
ருசியே இல்லாவிடினும் நம்பிக்கை தரும்
ஐம்பது ரூபாய்க்கு பத்து ஆப்பிளும்
பத்து ரூபாய்க்கு மூன்று பேனாவும்
வலி தீர்க்கும் என வலிக்க பேசும் தைலமும் ... மட்டுமே தான்
.
இருந்தும்
இன்றெல்லாம் அவர்கள்
பிச்சை எடுப்பதே இல்லை...
.
ஓடிப்போன அப்பா
நோயால் ஓய்ந்துபோன அம்மா
வரதட்சனையால் மணமாகாத அக்கா
தப்பி தவறி திருமணமானால்
பணமென்று பிச்செடுக்கும் அத்தான்
தான் தொலைத்த படிப்பை
தன் தம்பி தேடி ஓடும் செலவு
என்ஜினியர் படித்தும்
வேலை இல்லாமல் நடுவுள்ளவன்
ஆப்பரேசன் செய்தால் நேராகும்
போலியோவால் வளைந்த கால்
இத்தனைக்கும் நடுவில் அவள் காதல்
.
இப்படி இவர்கள் முதுகிலும்
நெஞ்சிலும் நம் கண் தெரியா பாரம்
இருந்தும்
இன்றெல்லாம் அவர்கள்
பிச்சை எடுப்பதே இல்லை...
.
யாரவது ரெண்டு பேர்
வாங்கினால் போதும்
இன்று உலை வைத்து விடலாம்
அம்மாவுக்கு மாத்திரை
தம்பிக்கு இன்டெர்வியு பாரம்
வாரக்கடனுக்கு வட்டி
தங்கச்சிக்கு குண்டுமணி தங்கம்
குடிகார அப்பனுக்கு குவார்ட்டர்
இதை எல்லாம் மறந்து போகிறான்
அந்த கூடை காலியானால்... காலியானால்??

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்