Friday, March 7, 2014

இந்த பூக்களை பறிக்காதீர்கள்


வந்து நின்ற பேருந்தில் ஏற வந்தவள்
ஐந்து ஆண்கள் மட்டும் இருப்பது பார்த்து
யோசனையுடன் பின் வாங்குகிறாள்.

"மாமாவோடு போய் விளையாடு"
என்று சொல்லும் அனிதா அக்கா,
இன்றெல்லாம் விளையாட கூப்பிட்டாள்
தயங்கி தயங்கி அனுப்புகிறாள் தியா குட்டியை.

பேசிக்கொண்டிருந்த தோழி
சரியாய் இருக்கும் மாராப்பை
மீண்டுமொருமுறை சரி செய்துகொள்கிறாள்.

அம்மாவும் சகோதரியும் கூட
என்னைப்பார்த்து
பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

வன்கொடுமையால் கொல்லப்பட்ட  சிறுமி
என்று செய்தி வந்த அதன்பிறகு
ஆண் பிள்ளை பிறந்த வீடுகளின்
சங்குகளில் கள்ளிப்பால் தயாரானாலும் ஆகலாம்.

பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை.
கள்ளிப்பால் எதிர்த்த தாய் கூட
பெண் குழந்தை வேண்டாமென பயப்படுகிறாள்.
அடுப்பூதி அடைந்து கிடந்தவர்கள்
தாங்களே உள்ளே போய் அடைத்து கொள்கிறார்கள்.

இதுதான் ஆண்கள் நாம் கொடுத்த பெண் சுதந்திரம்.
கொடுத்தோமா?
அவர்களிடமிருப்பதை எடுக்காமல் இருந்தால் போதும்.

பூக்களை பறிக்காதீர்கள்
என்று சொன்னால் எவன் கேட்டான்?
காவல் காரன் தடி எடுக்கும் வரை. எடுத்தும் கூட.

- காதலிக்கப்பாடாதவன் 

அர்னாப் கோஸ்வாமி கிட்ட மாட்டிக்கிட்ட ராகுல்  காந்தி மாதிரி எதுக்கெடுத்தாலும் "Women Empowerment, Women Empowerment"-ன்னு மட்டும் வெறும் வார்த்தையோடு நின்றுவிடாதீர்கள்.

நிர்பாயாக்கு, அமிலத்தில் அடி வாங்கியவளுக்கு இப்படி எல்லோருக்கும் நீதி கிடைக்குதோ இல்லையோ வீர பெண்மணி விருது கிடைத்துவிடுகிறது. குற்றவாளியை தண்டித்துவிட்டோமே, நீதி கிடைத்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு புரியவில்லை. இன்னுமொரு நிர்பாயா, உமா, லக்ஷ்மி உருவாகாத சமுதாயம் அமையும் வரை HAPPY WOMEN'S DAY என்று வாழ்த்துவது நெஞ்சுக்குள் லேசாய் உறுத்தத்தான் செய்கிறது.








No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்