Sunday, February 10, 2013

க்ஆ-த்அ-ல் - 1

 
உயிர் மெய் இணைதலில
காதல் ஜனிக்கிறது...
உயிர் இனிக்கிறது
.
o.o.o
.
பொம்மைக்காய் அடம்பிடித்தழுது
மிட்டாயில் ஆறுதலாகிவிடும் பிள்ளையாய்
என் தேவை உன் காதலாகினும்
இப்போதைக்கு
நீ பேசுவதே போதுமாய் இருக்கிறது...
.
 o.o.o
.
மாலை பள்ளி மணியையே
பார்க்கும் குழந்தை ஏக்கமாய்தான்
நானும் கைபேசித் திரையை பார்க்கிறேன்...
.
 o.o.o 
.
பிள்ளையை அடித்துவிட்டு
அழுகையில், கட்டிக்கொள்ளும் அம்மாவாய்
காயப்படுத்திவிட்டு
கட்டிக்கொள்கிறது காதலும் என்னை
o.o.o 
.
சண்டைபோட்டுக்கொண்ட
அம்மா அப்பா நடுவில்
பிள்ளையின் அழுகையாய்
முகம் திருப்பிக்கொண்ட
நம் நடுவே காதல்
.
 o.o.o 
.
பொம்மைக்கு தெரியுமா? இருந்தாலும்
பிள்ளையின் பிரியம் அளப்பரியது
உனக்கும் சொல்லப்படாத
என் காதல் போல்...
.
o.o.o
.
காதலிப்பவர் பிள்ளையாகையில்
காதல் தாய்
காதல் பிள்ளையாகையில்
காதலிப்பவர் தாய்
.
அழவைக்கும்; அள்ளி முத்தமிடும்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்