Tuesday, January 29, 2013

கழியாத மார்கழி

 
படம் இங்கிருந்து
.
முடித்துவிட்டு கேட்கிறாள்
"கோலம் அழகா இருக்கா?"...
உன்னருகே...
அசிங்கமாய் தான் தெரிகிறது
சொல்ல முடியவில்லையே!
(அப்புறம் அடி யாரு வாங்குறது)
o.o.o
.
உன் சோம்பேறிதனத்திற்கு
அந்த கோலத்திற்கு ஏன்  
இரவெல்லாம்
பனியில் நிற்கும் தண்டனை?
o.o.o
.
மார்கழி முடிந்து
ஒரு வாரம் தானே ஆகிறது
உன்னை பார்க்காத சோகம்...
கன்னத்தில் தாடியுடன்
உன் வீட்டு முற்றம்...
புற்கள்!
o.o.o
.
குளித்துவிட்டு வீட்டுக்குள்
நடந்தாய்...
முற்றத்தைவிட வீட்டுக்குள்தான்
அழகான கோலம்...
உன் கால்தடமாய்...
o.o.o
.
கோலம் போட
தெரியாதென்கிறாய்...
வேண்டாமடி செல்லமே
கால் பதிய நடந்து வா போதும்
( இது பழசு; நான் எழுதி நான் ரசிச்சது)

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்