Tuesday, September 17, 2013

பூனையும் பாலும்


அடுப்படியில் யாரோ,
எதையோ தேடப்போய்
கை தட்டி சிந்திய பாலுக்கு

அப்பாவி பூனைமேல்தான்
பழி விழுகிறது…

o

பாலை எடுத்துக்கொள்கிறார்கள்.
மாட்டிடமிருந்து இவர்கள்.
இவர்களிடமிருந்து பூனை.

எது திருட்டு?
எது மட்டும் திருட்டு?

o

ஒரு பூனையால்
குடிக்க முடியாத அளவு
பால் களவு போயிருப்பது போதாதா?

திருடியது பூனையில்லை
என்பதற்கு சாட்சி.

o

உரிமைககளையே இங்கே திருடத்தான்
வேண்டி இருக்கிறது.

பால் திருடிக்கொள்கிற
பூனையை போல்.

o

சுடும். தெரியாமல் இல்லை.
இருந்தும் பூனைக்கு
அவசரம், ஆசை.

சூடுபட்டுக் கொள்வதின் சுவை
பூனைக்கு மட்டும் தான் தெரியும்.

o

பசித்த பூனை நான்
சுடச்சுட
என்னை திருடிக்கொண்ட பால் நீ…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்