Saturday, May 3, 2014

நிஇஇலாஆஆ


வெள்ளை முற்றுபுள்ளியில்
அழகாய் தொடங்குகிறது
அந்த கவிதை…

தொட்டில் சீலை வழியே
தாய் கண்ட குழந்தையாய்
சிரிக்கிறேன் நிலா பார்த்து,

அழுது கொண்டிருந்தவன்
கண்களை துடைத்து
சிரிக்க காரணமான
இன்னொரு பெண்,

அவளின் இன்மையை நிரப்பிவிடுகிற
இன்னொரு பெண் இவள் மட்டும்தான்.

எல்லா இரவும்
அமாவாசை ஆகிவிட்ட போது,
தூரத்தில் தெரியும்
வெள்ளை வெளிச்சத்தை
நிலவென்று நம்பி உறங்கப்பழகிக்கொண்ட
குழந்தையாய் நான்…

நம்புவதற்கும் ஏமாறுவதற்கும்
நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்