Saturday, May 3, 2014

Sydney Sheldon, Train & காதல்

||பேருந்துக் காதல் - 1 | 2 | 3 | 4 || இரயில் காதல் - 1 | 2 ||

கையில் சிட்னி ஷெல்டனுடன்
எதிரே உட்கார்ந்து வாசிக்க தொடங்கினாள்.

138வது பக்கத்தின் பாதியில்
புத்தகம் திறந்திருக்க உறங்கி இருந்தாள்.

நான் மட்டும்
என் முன் இருக்கும் கவிதை புத்தகத்தின்
முதல் பக்கத்தையும் கடக்கவும் முடியாமல்,
மூடிவைத்துவிட்டு உறங்கவும் முடியாமல் தவிக்கிறேன்.

 When people tell me I’ve kept them up all night, I feel like I’ve succeeded. - Sydney Sheldon

 oOo

அன்று
வந்து சேர்ந்தது ரயில்கள் மட்டும் தான்.
வெளுத்திருந்தது வானம் மட்டும் தான்.
பிரிந்து போனது திசைகள் மட்டும் தான்.
முடிந்து போனது நாவல் மட்டும் தான்.

ரயில் இஞ்சின் அணைக்கப்பட்ட பிறகும் கூட
அதை தாண்டியும்
தண்டவாள பாதை மட்டும்
இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது.

…but ready or not,life goes on. – Sydney Sheldon

P.P.S. – Ok! It is just another Crush starts at Tambaram and ends while I’m in sleep :P

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்