Monday, October 20, 2014

அப்பிகை மழை


அவன் காதல்,

நின்று நிதானமாய்,
யோசித்து, ஒத்திகை பார்த்து,
அழகாய், கவிதையாய் எல்லாம்
பெய்யத் தெரியாத
அப்பிகை மழை.

பெய்யென பெய்கையில்,
குடை விரித்துக்கொ(ள்ளா)ல்லாதே…
தாங்காது.

o

அவன் காதல்,
கொட்டும் அப்பிகை மழை.

தேநீர் குவளையின் கதகதப்பில்
ரசிக்கக் கூடியதில்லை,

குடைபிடித்து, ஒதுங்கி
ஓடத் தேவையில்லை,

இறங்கி நட, மெல்ல நனை,
மழையிடம் உன்னைக் கொடு,
மழையை கொஞ்சம் கையில் ஏந்து.
உனக்கும் பிடிக்கும்.

o

மழையின் கல்லறையில் பூக்கும்
வானவில் ரசிக்கும் தேவதை அவள்.
அவளுக்கான வானவில் செய்ய
மீண்டும் மீண்டும் பிறக்கும் மழை அவன்.

தேவதையே வானவில் வேண்டுமா?

- காதலிக்கப்படாதவன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்