Tuesday, October 28, 2014

பசி தீரா கனவு


கலி முற்றும் சாமத்தில்,
புயலேரிய கடலாகும் கட்டில்.
உச்சிமண்டையில் நடமாடும் களிறிரண்டின்
காலிலிருந்து கழன்று உருளும்
சலங்கை மணிக்குள் அனு பிளவும்.
பிடரி பூத்த வியர்வை பற்றி எரிய
நிலா வந்து நெய் வார்க்கும்.
பயந்து, பூமியிலிருந்து இறங்கி
வின்நதி மீது ஓட எத்தெனிக்கையில்
மீன்களின் முள் இடறி உயிர்
முடிவறியா குழிக்குள்ளே விழப்போகையில்…
அவள் மடியில் விழித்துக்கொள்கிறேன் நான்.

திருவிழாவில் தொலைந்த குழந்தையை
தேடி வந்து தூக்கி கொஞ்சும் தாயென
தலை வருடி, உச்சி முகர்கிறாள்.
மீண்டும் ஒரு கனவு. வேறொரு கனவு. தொலைகிறேன்.

- காதலிக்கப்படாதவன் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்