Thursday, March 3, 2011

உலக அகரம்


அ – அரசியல்...
தேசத்து புனித
நதிபோலிது...
(மா)க்களின் ஆறாம்அறிவு
நாசமாக்கியது இதை...
 

ஆ – ஆன்மிகம்
கோயிலையே
மறைக்கும் அளவு
சாமியாரைப் பற்றிய
விளம்பரப் பலகை பார்கையிலே...

பிள்ளையாரே எலியிலே
போகையிலே...பூசாரிக்கு ____ கேக்குதோ 
என்பது நியாபகம் வந்தது..

இல்லை கீதை சொன்ன
மனித உருவில்
கடவுள் அவதறிப்பான்
என்பதை தவறாய்
உணர்ந்தனரோ...

 இ – இடைவெளி
ஆக்குவதோர் இயந்திரம்
ஆட்டி வைப்பதோர்
இயந்திரம்(உயிருள்ள!)...
இரண்டுக்கும் நூலளவு
இடைவெளி...ஆறாம்அறிவு


ஈ – ஈகை
தர்மம் தலைகாக்கும்
இது கலியுகத்திற்குத் தகா!
இங்கே தர்மம் செய்தவனும்
ஒருநாள் யாசகம் கேட்பான்...
இதோ வாழ இடம் கொடுத்த
பூமி உயிர் யாசகம் கேட்பதுபோல்...

உ – உண்டியல்
திருப்திபடாத ஒரே
  திருவோடு...
  மனிதன் கடவுளை
 பிச்சைகாரனாக்கி
 கையில் கொடுத்த
  உண்டியல்...
ஊ – ஊணம்
        அநீதியை எதிர்த்துப் பேசா நா...
        நீதி துடிதுடித்து சாக காணும் கண்...
        தீய பாதையில் அடியிடும் கால்...
        அக்கிரமத்திற்கு மடுக்கும் செவி...
        உலகத்தை சிதைக்கும் கரம்...
        உண்மையை சிந்திக்காத மூளை...

எ – எட்டு
 உலகில்...
 மனிதம்-அமைதி-நட்பு-தாய்மை
நன்மையை விளையும்
        நா-சிந்தணை-கல்வி-செல்வம் ஆகிய
        எட்டா கனிகள் எட்டை எட்ட முயல்.



 ஏ – ஏலம்
நாகரிக உலகம் ஒரு
விசித்திர சந்தை...
இங்கே மனிதன் தன்னைத்தானே
கொத்தடிமையாய் ஏலமிடுகிறான்...


 
ஒ – ஒவ்வா!
பொது இடத்திலே உண்மை (அரசியல்) பேச,
தாயை மழலையால் அம்மா என அழைக்க,
பெண்களில் சிதையையும் ஆண்களில்
ராமனையும் தேட ஒவ்வா கழியுகமிது...


ஓ – ஓட்டம்
வாழ்க்கையுமோர் ஓட்டம் தான்
இங்கே உண்மையாண வெற்றிக்கு
எல்லை கோட்டை தாண்டிதான்
வேகம் மேலும் அதிகரிக்கனும்...



ஐ – ஐயம்
இவன் காதலின் 
காதலின் மெய் பொருள்
உணர்வான், எந்நாள்?
இளமையின் உண்மை
இலக்குணர் நாளென்ரோ?
ஔ – ஔவை
ஔவையை போல
கன்னியிலேயே கிழவியாகிருப்பாளோ
தமிழண்ணை...அதன் விரைவில் அவளை
மரணம் துரத்துகிறது...

 
முற்றுப்புள்ளியாய்
மூன்று புள்ளி வந்தது கவிக்கு...
என் கவி முடிகிறதென்றால்
அவள் சிரிக்கவில்லை என்று
பொருள்...

1 comment:

  1. awesuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuum...........da

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்