Friday, February 21, 2014

என்னை அழவைத்தவளுக்கு


உடைப்பதாயிருந்தால்
தாரளமாக உடை என் இருதயத்தை.
இன்னொருத்தி வந்தால்
நுழைய வசதியாக இருக்கும்.

வேண்டாமென்றால்
பத்திரமாய் திருப்பிக்கொடு
கடிதம் மட்டுமல்ல, என் இருதயத்தையும்.
வேறு யாருக்காவது பயன்படும்.

தூக்கி எறிவதாய் இருந்தால்
நீ இல்லாத கிரகத்தில் எறி.
வேறு யாரையாவது
காதலிக்க பழகவேண்டும் நான்.

போவதாய் இருந்தால்
தாரளாமாய், உடனே போ.
ஆனால் என்னிலிருக்கும் உன்னை
மொத்தமாய் எடுத்துப் போ.

என்னிலிருக்கும் உன்னை
முழுதாய் பிரிக்க முடியாத வரை…
என்னை எங்கு தூக்கி வீசினும்,
நீ இல்லாமல் இருக்கப்போவதில்லை என்னுடன்.
என்றும் என்னுள் நுழையும் உரிமைகொண்ட
அந்த இன்னொருத்தி நீ மட்டும் தான்.

அதுவரை
திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை.
என் இருதயத்தை.

காயம் செய்.காதல் செய்.

என்ன தான் அழவைத்தாலும்
நான் விரும்பி அழுவதற்கு
நீ என் அம்மாவாய் இருக்க வேண்டும்.
இல்லை என் காதலாய் இருக்க வேண்டும்.

நீ என்னை அழவைத்தவள்.
நீயே என்னை அன்பால் அள்ளி அணைத்துக் கொண்டவள். - காதலிக்கப்படாதவன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்