Monday, April 13, 2015

பூனைக்கு எதிராய் பொய் சாட்சி


பாத்திரம் விழும் சத்தம் கேட்டபோது,
போய் பார்க்கவில்லை நீங்கள்.

மியாவ் சத்தமும்,
விழுந்து கிடந்த சொம்பும்,
காணமல் போன பாலும் மட்டும்
எப்படி சாட்சியாகும்?

போய் பார்க்கவில்லை நீங்கள்.

அதற்குள்,
அந்தப் பூனையை சந்தேகப்படாதீர்கள்.

o

எப்படி குடித்தால்,
காணாமல் போன பாலிற்கு
பூனையை சந்தேகப்படுவீர்கள் என்று
உங்கள் வீட்டு திருடனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

பாலில் மிதக்கும் கைரேகை
பூனையுடையதென்று சாதிக்கிறீர்கள்.
ஆனால் பூனைக்கு கைரேகை உண்டா?
தெரியாது உங்களுக்கு.

பூனையை திருடன் என்று சொல்லும் கதைகள்
உங்களுக்கு பிடித்திருக்கிறது.

- காதலிக்கப்படாதவன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்