Monday, April 13, 2015

ஈரமில்லாத மழை

எல்லோரும் வெயிலில் நனைந்துகொண்டிருக்க,
நான் மட்டும்
மழையில் வெந்து கொண்டிருந்தேன்.

சூடு தாங்கா பாதம் தட்டும் கதவுகள்
முகத்தில் அறைந்து சாத்திக்கொள்கின்றன.
அறைந்த கன்னத்திற்கு காட்டிய மறுகன்னத்தில்
வழிந்தோடிய மழை நீரின் சுவடில்
பூக்கள் அரும்புகிறது.

வெயிலின் குளிர் தாளாத பூவிற்காய்
மீண்டும் பெய்யாயோ மழையே?

- காதலிக்கப்படாதவன் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்