Monday, April 13, 2015

திவ்யா குட்டியும் ரோஸ் மரமும்

சீதாப்பழத்தை
விதையோடு சாப்பிட்டவளிடம்
வயிற்றுக்குள் மரம் முளைக்குமேன்று
அம்மா பயமுறுத்தும் போதெல்லாம்,
ரோஸ் மரம் வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறாள்
ரோஸ் தொட்டிக்குக் கூட இடமில்லாத
3 வது மாடியில் வாழும் திவ்யா குட்டி.

o


மல்லி சட்டினியை பார்த்தவள்,
“எனக்கும் மருதாணி வச்சு விடுமா”
என்று ஒரே அடம்.
அம்மாவின் கையில் ஒட்டியிருந்த  மல்லி சட்டினி
திவ்யா குட்டியின் முதுகில் சிவந்திருந்தது.

அன்றிலிருந்து
மல்லி சட்னியும் சுவைக்கவில்லை,
மருதாணியும் சிவக்கவில்லை.

- காதலிக்கப்படாதவன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்