Thursday, October 13, 2011

பூமியை வாழவிடு



தலைப்பை படித்ததும்
நவீன இளைஞனின்
உளத்தில் வடிந்த வரிகள்
நடைமுறை வடித்த வரிகள்

நாங்கள் பெற்றத் தாய்க்கு
விசமூட்டிவிட்டு
அவள் முலையில் பால் தேடும்
மூடர்கள் ... நங்கள்
எங்கே இயல் உரத்தால்
பூமியை வாழவிடுவோம்

என் நாவு மட்டுமல்ல
என் ஏழு தலைமுறையும்
சுவைக்க சத்தான உணவு வேண்டும்
ஆனால் என் விளை நிலங்கள்
வீடு மனையாகும் ... நாங்கள்
எங்கே பசுமையாய்
பூமியை வாழவிடுவோம்

கோவின் காவலுக்கு
ஒசான் போர்வை போதவில்லை
என்று நினைத்தேனோ என்னவோ
இதோ அலைபேசி அலைக் கற்றையால்
போர்வை போர்த்தி
வாழ வைக்கிறேன் பூமியை

தாய் முகம் பருவேன்று எண்ணி
பறைகள் இருக்கும் இடம் எல்லாம்
பட்டாசுகள் பதுக்குகிறேன்
தாய் நெஞ்சில் முள்ளேன்று
நினைத்தேனோ என்னவோ
காணும் மரங்களெல்லாம் வேரறுத்தேன்

பூமியையும் புகைக்க வைத்தோம்
என் தொழிற்சாலை புகைப்போக்கியால்
போதாதென்று வராத போருக்கு
தகாத ஆயுதம் சோதனை செய்கிறோம்
தாய் கருவறைக்குள்
நாங்கள் எங்கே வாழவிடுவோம்

பூமியை நிம்மதியாய்


இவைகள் எவர் இதயமும்
நிந்திக்க எழுதியதல்ல

மூளை கொஞ்சம் சிந்திக்க எழுதியது 


P.S. -
"This lines won a consolation prize at Suryab FM's poetry competition on Vairamuthu's Birthday"

பி.கு. -
"இந்த வரிகள் சூரியன் எப்.எம். கவிபேரரசு வைரமுத்து பிறந்தநாளன்று நடத்திய கவிதைப் போட்டியில் அறுதல் பரிசை வென்றது "

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்