Tuesday, May 22, 2012

இப்படி வேண்டும், என் காதல்


"குட் நைட்"  சொல்லிய பிறகும்
ஒரு மணி நேரம் பேசி...
மூன்று மணி வாக்கில்
பாதி குறுஞ்செய்தி தட்டச்சியவரே
உறங்கிப்போக வேண்டும்
அவள் கொடுக்கும்
ஒரு மிஸ்டு கால் தட்டி எழுப்ப
காலை எழ வேண்டும்...

பெப்சோடென்ட்  தடவிய
டூத்பிரஷ் மென்றுகொண்டிருக்கையில்
நேற்று sms சொன்ன காதலை
அசைபோட்டு சிரித்திட வேண்டும்...
எந்த வண்ணம் அவளணிவாள் குழம்பி
என் அலமாரியை அலங்கோலமாக்கி
அறைக்கண்ணாடியை தினம் அழவிடவேண்டும்...

அவளையும் என்னையும் தூக்கி சுற்றியே
என் காதல் ரதம் boxer 150 க்கும்
தினம் பெட்ரோல் தாகம் எடுத்திட வேண்டும்
சுற்றி திரிபவர்கள் முகங்களில்
அவள் முகமூடி பார்க்க வேண்டும்...

விக்கல் வந்தால்
அவள் தான் நினைப்பதை சொல்லி
நான் அவளை நினைக்க வேண்டும்

பெண்  மலர் அவள் மகரந்தம் தூவிய
கைக்குட்டை கிடைக்க
பொய்யாகவாது நான்கைந்து முறை
தும்மல் வர வேண்டும்...

அவள் தாமதமாய் வருவாள் தெரிந்தும்
மொட்டை மலை உச்சியில்
விரைவாய் போய் காத்துக்கிடக்க வேண்டும்..
அவள் தாமதத்திற்காய் 
பொய் கோபமாய் நடிக்க வேண்டும்
பொய்யென்று தெரிந்தும் அவள்
ஒரு முத்தம் கொடுத்திட வேண்டும்...
விரல்களில்தானா இதழ்களில் இல்லையா
என்று நான் நொந்து கொள்ள வேண்டும்...

சுடுகிற  பாறையில் நோகும்,
உன் பாதத்தை என் நிழலினில்
நான் காத்திட வேண்டும்...
கிடக்கிற மீதி தூரத்தை
என் கரங்களில் உனை சுமந்து
நான் கடந்திட வேண்டும்...

எப்போதாவது  பெய்திடும் மழையில்
அவள் துப்பட்டா குடை போதாமல்
இருவரும் நனைந்திட வேண்டும்...
நேற்றே சொன்னேன் கேட்டாயா
என்று  வருகிற ஒவ்வொரு தும்மலுக்கும்
ஒரு குட்டு அவள் கொடுத்திட வேண்டும்...

அப்போ அப்போ அவள் மடியில்
நான் சாய வேண்டும்...
அவள் பூங்கரம் வருடுகையில்
உலக பாரம் எல்லாம் நான் மறக்க வேண்டும்...

பெண் அவள் கண்ணீரை
எல்லாம்  என் சட்டை துடைத்திட வேண்டும்...
அன்பானவள் பயத்தை எல்லாம்
என் தோள்கள் துரத்திட வேண்டும்...

கண்களால் உச்சரிக்கும்
காதல் தேசத்து மௌன மொழி
நாங்கள் கற்க வேண்டும்...
சொல்ல நான் தவிக்கும் என் காதலை
என் இறுதய புத்தகம் திறந்து
அவள் மொழி பெயர்க்க வேண்டும்...

free hairஇல் அவள் வருவாள் தெரிந்தும்
"உன்  பொஞ்சாதிக்கு வாங்கிப் போ"
என்ற பூக்கார கிழவியின் அந்த சொல்லுக்காய்
ஒரு  முழம் பூ நான் வாங்கி வரவேண்டும்...

பங்குனி வெயிலில்
கடற்கரை மணல் சுடுவதை
நான் உணர மறக்க வேண்டும்...
என் எதிரே என் எதிர்காலம் அவள் இருந்தும்
"ஜோடி பொருத்தம் அருமை"  என்ற சொல்லுக்காய்
அந்தக் கிழவியிடம் கைரேகை பார்த்திட வேண்டும்...
உங்களுக்கு  ஆண்பிள்ளை பிறப்பானென்று
வாழ்த்திய முதியவளின் சொல்லுக்காய்
ராமன் நான் கர்ணனாய் மாறிட வேண்டும்....

ஊரில் உள்ள எல்லா தெய்வத்திடமும்
எங்கள் காதலுக்காய் வேண்டிக் கொள்ள வேண்டும்...
இன்றே நாம் குழந்தை பெயர் பார்க்கனும்
உனக்கு  என்ன பிள்ளை பிடிக்கும் என்று
அவளை தினம் நச்சரிக்க வேண்டும்...
இரண்டானாலும்  எனக்கு சரிதானென்று
அவளை வம்பிழுக்க வேண்டும்...

விடுமுறை  நேரத்தில்
என்னை இந்த சொர்கத்தில்
தனியாய் அவள் விட்டு போகையிலே
நரகம் இது என்று கவிதை பாட வேண்டும்...

அவள் தாய்க்கு இரண்டாவது  செல்லமாக
தந்தையின் அரசியல் வாரிசாக மாறி
அவளை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும்...
அவள் தங்கையோடு குறும்பு செய்து
அவள் கோபம் ரசிக்க வேண்டும்...

என்  வாழ்கையை 
அவள் என்ற மொழியாலே
புதிதாய் எழுதிட வேண்டும்...
எனக்கு எதற்கு புரிய?
அவள் முழுதும் அருகிலிருந்து
வாசித்துக் காட்ட வேண்டும்...


நான் காதலிக்க வேண்டும்
இப்படி ஒரு காதல் வேண்டும்

4 comments:

  1. அட அட அட.. அண்ணா ஆச சும்மா தூள்! மனம் போல் காதலும் காதலியும் அமைய வாழ்த்துக்கள்! ஏற்கனவே அமஞ்சிருந்தா, நல்லபடியா கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  2. jaammmmmm ... semmaaa ..loved it...
    " raaman naan karnanai maarida vendum.. "...
    " aval thaai ku iranndavathu chellam..." super lines .....

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்