Monday, November 19, 2012

பேட்சுலரின் சென்னை


தீண்டாமை ஒழிந்துவிடவில்லை
வேறு ஒரு உருவம் எடுத்துள்ளது

குடும்பத்தினருக்கு மட்டும் வாடகைக்கு
என்ற பலகை
நாய்களை அனுமதிக்கிற அந்த வாசல்வழி
எங்களை அழையா விருந்தாளியாக்கிவிடுகிறது

நாங்கள் வந்தாலே மகள்களை
உள் போகச் சொல்லி
முகத்திலடிக்கப்படுகிறது
அபார்ட்மென்ட் வீடுகளின் கதவு
அப்படி செய்வது  அவர்களின் மகள்
ஸ்பெஷல்  கிளாஸ் போவதை
தடுத்திடுமோ

எங்கள் யோக்கியதனத்தை
அவ்வளவு சோதிப்பது
இவர்களின் வீட்டு கழிவறை சன்னலில்
புகை கசிவதை தடுத்திடுமோ
ஆனந்த விகடனிலும் ராணியிலும்
தொலைந்த நடுப்பக்கத்தை மீட்டிடுமோ

நாங்கள் குளிர்பான பாட்டிலும்
வாழைப்பழ சீப்புமாய் வந்தால்
கீழும் மேலுமாய் பார்த்துவிடுவது
அவர்களின் மகன்
குருப் ஸ்டடி போவதை
தடுத்திடுமோ?

பனை மரம் என்று
எழுதிய இடத்திலிருந்து கூட
எங்களால் பால் குடிக்க முடிவதில்லை

மருமக உடைச்சா
மண்சட்டியும் பொண்ணாம்
எனக்கு நீ மாமியாரும் இல்ல
நான் உனக்கு மருமகனும் இல்ல
இங்க எந்த சட்டியும் உடைபடவில்லை
ஏனோ எங்கள் மீது  குற்றசாட்டு  மட்டும்


சோதனை நாய்களாய்
எங்களை அவர்களின் கண்கள்
தினம் முகர்ந்து பார்க்குது ஏனோ!!

என்ன முகர்ந்தென்ன
கழுதையால் என்றும்
கற்பூர வாசம் உணர முடியுமா என்ன?

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்