Wednesday, December 19, 2012

[2012 v1.0] மாயன் லீ(இல்)லை

எரி கல், கருங்குழி ,பேரலை
வாய்பிழவும் பூமி என்கிறான்
மாயன் நாட்குறிபென்கிறான்
ஆனால் தான்தான்
இந்த பேரழிவிற்கான
காரணமென்பதை மட்டும்
மனிதன் மூடி மறைக்கிறான்...

அழிவை கேட்டதும்
உயிருக்கு அஞ்சியவன்
அழித்த தன் செயலுக்காய்
இன்னும் வருந்தவில்லையே

தின்பதெல்லாம் விஷம்...
செய்வதெல்லாம் அதர்மம்
பேசுவதெல்லாம் காயப்படுத்தவே
வெல்வதேல்லாம் மிதித்து தள்ளியே

"வல்லனவற்றில் வாழ்வு வளம்" (Survival of the Fittest)
டார்வின் சொன்னதென்னவோ
உயிர்கள் உருவாகத்தான்
தான் மட்டுமே உயிரென்று கொண்டு
அழிவாய் மாற்றியே விட்டான் மனிதன்

இன்னும் இந்த பூமி
இருந்து என்ன செய்ய
உலகம் அழிந்தே ஆகா வேண்டும்...

சாக பயப்படுபவனே...
எறும்பின் எண்ணிக்கை; தீப்பட்டி வீடு
யானை உடல்; சோளப்பொறி காசு
அரசியல் அசிங்கம்; விலையோ நசுக்கும்
வெடிகுண்டு புகை;ஊரெல்லாம் பகை
அறிவியல் கொலை; அறிவே விலை
என்று வாழ்வே
போராட்டமாகிப் போனவனிடம் கேட்டு பார்
உலகம் அழிவதின் அவசியம் சொல்வான்...

                                        P.S. -  உயிரோடிருந்தால் மீண்டும் (ச)சிந்திப்போம்... புது மனிதனாய்




No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்