Sunday, December 2, 2012

நடித்துவிடுகிறேன்

எதையும் பார்க்காதது போல்
கடந்துவிடுகிறேன்...

இருதயம் உடைத்துவிட்டு
போகும் அவளை,
நான் தேவைப்படாமல்
போன  என் நட்பை
எதையுமே

எதையும் கேட்காதது போல்
இருந்துவிடுகிறேன்...

என் முயற்சிகளை கண்டு
நகைக்கும் ஏளனங்களை,
என்னை பின்வாங்க சொல்லும்
அச்சுறுத்தல்களை
எதையுமே

எதையுமே சொல்லாமல்
வந்துவிடுகிறேன்...

அப்படி செய்தால் என்ன? என்பவரிடம்
இப்படி செய்தால் என்ன? என்பதை,
அது இல்லையா என்றவரிடம்
இது இருக்குது என்பதை
எதையுமே

எதையுமே உணராதது போல்
கிடந்ததுவிடுகிறேன்...

தன்  தேவை வருகிற பொது தான்
என்னை  அடையாளம் காணுகிற
என் உலகை,..
பணப்பையை கண்ணால் எடைபோடும்
என் உறவை அதன் வித்தையை,
எதையுமே

எதையுமே  தெரியாதவனாய்
நடித்துவிடுகிறேன்...

அழுக்கு  சட்டையில்
என்றோ மறக்கப்பட்ட 
நூறு ரூபாய் தாளின்
மௌனம் நான்...

மாதக் கடைசியின் நெரிசலில்
நான் தான் உன் கடவுள்

அந்த நாள் வரை
எதையுமே தெரியாதவனாய்
நடித்துவிடுகிறேன்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்