Friday, March 8, 2013

தேவதையின் சிறகு சுமை

கவிதை v 2012



ஜனனம், பாசம், சகோதரத்துவம்,
காதல், துணை, சந்ததி
சுகக்கின்ற காயம், இனிக்கின்ற கண்ணீர்,
சுவர்க்கமாய் மடி, சுகமாய் தோள்

எத்தனை எத்தனை வரங்கள்
இந்த தேவதை எனக்கு கொடுத்தது…

அவளுக்கு  நம் சமுகம் கொடுத்ததென்னவோ
கள்ளிபால், அரைகுறை கல்வி,
வரதட்சணை சுமை, அடுப்படி சிறை,
தாலி என்னும் முள் வேலி,
சீரியல் கண்ணீர், காமம்,  பயம் 
கற்பென்னும் சிலுவை,
காபி கேட்டு அதட்டும் கணவன்,
வேண்டுமென்றால் போட்டு குடி
என்று சொல்ல முடியாத அளவு சுதந்திரம்

என்கின்ற சாபங்கள் மட்டும் தான்…

இந்த தேவதைகளுக்கு மட்டும்தான்
சிறகுகள் கூட சிலுவை மரங்களால் செய்யப்பட்டது

அனுகுண்டிடம் கூட தப்பித்துவிடுகிற
கரப்பான் இவளின் துடைப்பானில் நைந்து போகும்
எனவே இன்னுமொருமுறை
இவளை இம்சிக்க நினைத்தால்
நெற்றிக்கண் திறந்து எரிக்கும்…
சிவனின் நெற்றிக்கண் பற்றி எனக்கு தெரியாது
இது சக்தியின் நெற்றிக்கண் நிச்சயம் எரிக்கும் பாவிகளே!

அம்மா, கடவுள் அப்படி இப்படின்னு எவ்வளவோ எழுதலாம் எதுவும் ஈடாகது… அந்த தண்டனை இந்த தண்டனை ன்னு எவ்வளவோ பேசலாம் சரியான கற்பிதம் தான் பெண்களுக்கான அநீதியை/அடக்கு முறையை மாற்றும். அது விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்

என்ன ஒரு முறை பெற்றெடுத்த ஒரு பெண்ணிற்கும், என்னை ஒவ்வொருமுறையும் புதிதாய் பெற்றெடுக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும், காதலை எனக்கு காட்டிய அந்த பெண்ணிற்கும், என் காதலை நிராகரித்த அந்த பெண்ணிற்கும், நான் சொல்லாமலே காதலிக்கும் அந்த பெண்ணிற்கும், என் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றும் எல்லா பெண்ணிற்கும் இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்.
 


 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்