Thursday, March 14, 2013

ரத்த மொழி

தினமும் கடக்கும் அந்த
பிரதான சாலையின் தரையில்
யாரோ ஒரு உடல்  தன் ரத்தம் கொண்டு
எதையோ எழுதி போவது உண்டு…

அப்படி என்னதான் 
எழுதி போகிறார்கள் அவர்கள்
 
தாங்கள் தலைகவசத்தை
தலையில் மாட்டாமல்
கையில் கொண்டுவந்த அவசியத்தையா?
 
போன வாரம் நிச்சயமாகி
வண்டி ஓட்டுகையில் கூட
கைப்பேசியில் குடும்பம் நடத்திய
வருங்கால மனைவிக்கு கொடுக்க மறந்த முத்தமா?
 
விரட்டி வந்த பெண்ணிடம்
சொல்ல மறந்த காதலா?
 
என்ன தவறு நான் செய்தேன்?
நீ செய்த நொடி பிழையில்
என் வாழ்க்கை முடிவதேனோ என்று
கேட்க முடியாமல் போன பரிதாப கேள்வியோ?
 
அவன் பிள்ளைக்காய் சொத்தும் இல்லை
சொந்தமும் இல்லை… அனாதை ஆக்கிவிட்ட
வருத்தத்தின் கண்ணீரோ?
 
பார்த்து வா என்ற அம்மாவிடம் மன்னிப்பா?
கோபித்து கொண்ட மனைவியை சாந்தபடுத்த
கொண்டு வந்த காதல் முத்தமோ?
அப்பா நான் டாக்டர் ஆகணும் என்ற மகளின் கனவா?
பதவி உயர்வை பிடுங்கிகொண்டவர்
மேலதிகாரி மேலான கோபமா?
 
அப்படி என்னதான் 
எழுதி போகிறார்கள் அவர்கள்
 
அதை இன்னும் எவருக்கும்
மொழி பெயர்க்க தெரியவில்லை…
தெரிந்திருந்தால் தினம் ஒருவன் எழுதிப்போவானா
தினமும் கடக்கும் அந்த
பிரதான சாலையின் தரையில்

பின்குறிப்பு –
  • காலனுக்கு missed call கொடுப்பதுக்கு கூட உயிரை கட்டணமாய் செலுத்தனும். எதற்கு வீண் செலவு?
     
    *~*~*~*~*~*~*~*~
     
    பழைய சோறு – தலை கவனம் | நில் கவனி காதலி
     

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்