Sunday, June 23, 2013

நீ எனப்படும் நான்



கடவுள் சொல்ல கேளாமல்
சாத்தான் சொல் மீறாமல்

ஏவாள் தர
ஆப்பிள் தின்ற ஆதாமிற்கு
கடவுள் தந்த காதல் சாபமாம்.

அந்த கடவுளிடம் சொல்லுங்கள்
உண்மையில் அது வரமென்று.

காதலே!
நீ எனக்கான வரம்.

o

ஒரு பாதி என்பது
ஈசனின் இழப்பல்ல.
அவ(ளென்னும்)ளின் மறுபாதி
அவனை நிறை செய்த லாபம்

நீ என்னை
நிறை செய்த சரிபாதி

o

உன்னை காதலிக்காத
அவளை எப்படி காதலிக்கிறாய்
என்கிறார்கள்…

யாருக்கும் என்னை போல்
காதலிக்கத் தெரியவில்லை…
வேறு என்ன சொல்ல?

நான் உன்னை காதலிக்கிறேன்
இது இறவாத காலம்…

o

என் மனைவி அதிர்ஷ்டசாலி என்பதை
நீ சொன்ன பிறகு தான் தெரிந்தது
நான் துரதிர்ஷ்டசாலி என்பது…

நான் எனக்கான சாபம்…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்