Thursday, June 13, 2013

நின்ற(றாலும்) மழையில் நனைபவன்

கொட்டும் மழை.
எல்லோரும் ஒதுங்கி நிற்க
நான் மட்டும் இறங்கி நடந்தேன்…

எல்லோரும் என்னை
கிறுக்கனாய் பார்த்தார்கள்

அடுத்த நாள்
அந்த மழை இல்லை. வெயில்.

ஒதுங்க யாருக்கும் நேரம் இல்லை
ஓடும் கால்களுக்கு
பொசுக்கும் சூடு பொருட்டாய் தெரியவில்லையோ?

ஓரத்தில் ஒதுங்கி நின்ற எனக்கு
இன்று எல்லோரும் கிறுக்கன்களாய் தெரிந்தார்கள்

o.o.o.

அந்த மழையில்
இதற்கு முன் வந்த
அந்த மழையை போலவே

அவர்களுக்கு
சூடாய் தேநீர் தேவை
காதோரம் இன்னிசை தேவை
கதகதப்பாய் காதல் முத்தம் தேவை
உயிர் வரை சிலிர்ப்பூட்டும் குளிர் தேவை
இதை எல்லாம் தருகிற மழை தேவை

இப்படி தேவைமட்டும் படுகிற
மனிதர்களை(?) பார்த்து
மழைக்கு சலித்து விட்டது…

எல்லாம் தர தயாராய் இருக்கும்
அவர்களைத் தேடி தான்
மழையும் எப்பொழுதாவது வருகிறது

o.o.o.

கப்பல்கள் கவிழ்ந்த பிறகும்,
சிரிக்க நீ குழந்தையாய்
இருந்திருக்க வேண்டும்

                                                                        - #R#

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்