Tuesday, June 25, 2013

யாருமற்றவன்

எப்படி இங்கு வந்தேன் ?
தெரியாது …
யார் கூட்டி வந்தது ?
தெரியாது …
அழைத்து வந்த தேவை தீர்ந்திருக்கலாம்
இல்லை
அழைத்து வந்ததே வீணென்று நினைத்திருக்கலாம்.
விட்டுவிட்டுப் போய் விட்டனர், என்னை…

ஆம்
தேவை தீர்ந்ததும்
தூக்கி எறிவதொன்றும்
இவர்களுக்கு புதிதில்லையே … எனக்கும் பயமில்லையே …

எனக்கென்று நேரம் இல்லை,
என்னை அழைத்துவந்தது நினைவில் இல்லை,
என்னை சேர்க்கும் இடம் தெரியவில்லை,
தவற விட்டுவிடப்போகும் பேருந்து,
அவசர வேலை…
என்று அவர்களுக்கு சொல்லி கொள்ள
ஆயிரம் காரணங்கள் இருந்தது.

யாருமே செய்வதில்லை நான் மட்டும் ஏன்?
எப்படியும் அவர்கள் செய்வார்களே. அப்புறம் ஏன் நான்?
என்று ஒவ்வொருவர் பக்கமும்
ஒரு நியாயம் இருந்தது …

எனக்கென்று
கவலைபடக் கூட ஆள் இல்லாமல்
தெருவில் நிற்கிறேன்…

                                   இப்படிக்கு தெரு குப்பை…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்