Monday, June 24, 2013

என்னை வாசித்த கவிதை


ஒரு போட்டிக்கென
எழுதி வைத்த கவிதையை
எடுத்து படித்துவிட்டு
நன்றாக இருப்பதாய் சொன்னாள்…

போட்டி துவங்கும் முன்
வெற்றி பெற்றிருந்தது என் கவிதை
o
பிடித்திருப்பதாய்
அவள் சொன்ன பிறகு
என் சோக கவிதை கூட
அன்று முழுக்க சிரித்திருக்கிறது

என்னை போலவே

o
தனக்கு எழுத வருவதில்லை
என சொல்லி உதடு சுளித்தாள்…

என்னை எழுத வைத்துகொண்டிருப்பது
அவளென்று தெரியாமல்

o
அவள்களைவிடவோர்
ஆகச்சிறந்த கவிதையை எழுதி
அவளுக்கு கொடுக்க முயற்சித்துகொண்டிருக்கும்
அவன்களை தான்
இந்த உலகம் கவிஞன் என்கிறது..

என்னையும்…

தோற்று போன எல்லா கவிஞர்களும்
காதலை எழுதுகிறார்கள்
வெற்றி பெற்றுவிடுகிறார்கள்

நானும் கூட

o
என் கவிதைகள்
எல்லாமுமே கற்பனைகளே.
எல்லாவற்றிலும் பொய் கலந்திருந்தது.

“நான் உன்னை காதலிக்கிறேன்”
என்று சொன்னதைத் தவிர…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்