Monday, July 22, 2013

ஈரமில்லாத மழை – 4


நிற்க போவதை சொல்லாமல்
மழை  நனைத்துகொண்டிருந்தது.
நிற்க போவது தெரியாமல்
மழையில் நனைந்துகொண்டிருந்தனர்.

o

மழை விட்டுபோனதை
நம்ப முடியாதவராய் இருக்கிறார்கள்
கிளை குலுக்கி, இலை நீரில் நனைந்து
தன்னை தானே ஏமாற்றிக்கொண்டு.

o

நனையும் ஆசையில் வந்தவனுக்கு
மழை நின்று விட்டது,
மழை வராமல் பொய்த்து
என்ற இரண்டும் வலி தான்
இரண்டுக்கும் நிறைய வித்தியாசம்.
இருந்தாலும் இரண்டும் வலி தான்.

o

நொடிக்கொருமுறை
குடைக்குள்ளிருந்து கை நீட்டி பார்க்கிறார்கள்
மழை நின்றுவிட்டதா என்று…
நின்றால் என்ன? நிற்காமல் பெய்தால் என்ன?
என்ன பெரிய வித்தியாசம் அவர்களுக்கு?

o

பூக்கள் சிரிக்கிறதாம்.
மழை அழுகிறதாம்.
இவர்களுக்கு யார் சொன்னது?
இதழ் விரிப்பது பூக்களின் கண்ணீராய் இருக்கலாம்.
தூறல் தெறிப்பது மழையின் சிரிப்பாய் இருக்கலாம்.

ஈரமில்லாத மழை – 1 | 23

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்