Friday, July 5, 2013

அடடே ஆச்சரியக் குறி - 6

அவர்களை பார்பதாய்
என்னை முறைத்துபார்க்கும்
அந்த பெண்களிடம் எப்படி சொல்வேன்…
எல்லோரும் நீயாய் தெரிவதை…

காலை இரண்டு மணிதான்
என்னும் கடிகாரத்திடம்
வேகமாய் விடிய சொல்லி எப்படி சொல்வேன்…
உனக்கென எழுதி வைத்த என் குறுஞ்செய்தி
என் விரலைத் தின்னுதடி.

காலை பத்து மணிக்கெல்லாம்
கத்தி எழுப்பிவிடும் உன் மாமியாரிடம்
எப்படி சொல்வேன்…
நம் மகனின் progress card ல் கையெழுத்திடும் முன்
கனவு கலைந்துவிடுவதை…

கவிதையென்று நினைத்து
இதை படித்து கொண்டிருக்கும்
இவர்களிடம் எப்படி சொல்வேன்
அவர்கள் ஏமாந்து போகப்போவதை

எல்லாமே இருந்தும், எதையுமே
சொல்லத்தெரியாது சொல்லமுடியாது
எனக்கும். என்  கவிதைக்கும்



அடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4 | 5


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்