Tuesday, July 2, 2013

இந்த பூக்கள் விற்பனைக்கு

நூறு சவரன் நகையையும்
ரொக்க பணத்தையும்
கட்டிக்கொள்ள போகிறவனுக்கு

60 கிலோ அன்பை
வரதட்சனையாய் கொடுத்தார்கள்…

ஒன்று இரும்பு பெட்டிக்குள்
இன்னொன்று அஞ்சறை பெட்டிக்குள் சிறை

o

கண்ணீரோடு பெண் வந்தாலே
கணவன் தொல்லையாய் தான் இருக்கும் என்று
ஒரு கட்டெடுத்து கொடுத்து
“போக போக சரியாகிவிடும்”
என்று சொல்லி அனுப்பும்
பிறந்த வீட்டாரின் பணத்திற்கு

அவள் கண்ணீர் கதை கேட்க நேரம் இல்லை

o

ஊரை மெச்ச வைத்தீர்களோ இல்லையோ…
ஊரார் நாக்கில் எச்சில் சொட்ட வைத்தீர்…

இப்போது நீங்கள் கிளப்பிய
பசியின் ருசிக்கு
இவர்கள் இரையாகி போகிறார்கள்

o

அவன் கேட்டு கொடுப்பவர்களைவிட
அவர்கள் கேட்பார்களே என கொடுக்கிற
இவர்களுக்கு எப்போது புரியும்?

கசாப்புக்கடைகாரன்
ஒரு துண்டு போட்டதும்
போதும் என்ற நாயே இல்லை என்று…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்