Thursday, August 15, 2013

அடிமையின் சுதந்திரம்


அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

விதயெல்லாம் மலடா போச்சு
எங்க செடிக்கு லைசன்சு எவன் பேரிலோ ஆச்சு
குலதொழிலையும் கை மறந்து போச்சு
விடியையில வேல இருக்குமா? துறமாரு இருக்காக

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

டாலர் சரிஞ்சா நெஞ்ச புடிச்சோம்
பணத்துக்காக நம்ம நாமே வித்தோம்…
அப்பா ரெண்டு ரூபாய்க்கு வித்த நெல்ல
மகன் வால்மார்ட்டில் நாப்பது ரூபா அரிசியா வாங்குறான்…
நாப்பது ரூபா ஆனா என்ன நாப்பதாயிரம் சம்பள இருக்கையில

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

ரெண்டு மாநிலம் தண்ணி கேட்டு அடிச்சுகிறான்
ஒரே மாநிலம் ரெண்டா பிரிஞ்சுகிறான்
சாதி சாமின்னு சனங்களத்தான் கொல்லுறான்
பத்திக்கிட்டு எரியற காட்டில் குளிர் வந்து காயுறான்…
என் வீட்டுக்கு எதுவுமில்ல. எனக்கெதுக்கு வீண் கவல

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

தொட்டவன் வாழ, சீதைகள் தீக்குளிக்காமல் எறிகிறார்கள்
காதல் உறங்கிய தண்டவாளத்தில் சாதி ரயிலோடுது
உழச்சவனுக்கு உணவு இல்ல, படிச்சவனுக்கு வேல இல்ல
எதிர்கட்சிக்கு பங்கு தரத ஆளும்கட்சி பிடிபதில்ல
அடுத்த தேர்தலில் தலையெழுத்து மாறும்

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

காந்தி காமராஜர் பேரை சொல்லி தேர்தலில் ஜெய்க்குது…
காந்தி பட நோட்டுக்காக மட்டும் ஆட்சி நடக்குது…
வெறும் மிட்டாயால 67 வருஷம் ஏமாற்றிப் போச்சு
பெத்தெடுக்க தாய் இன்னும் லஞ்சம் கேட்கல…
மத்தபடி இன்னும் நீயும் நானும் அடிமைகள் தான்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்