Wednesday, August 28, 2013

கண்ணன் வருவான்


அந்த வீட்டு ராதைக்கு
கண்ணன் வேஷம்.
கிருஷ்ணஜெயந்தி.

o

கண்ணன் வருவான்
என்பதை நம்பாதவர்கள் தான்
 அரிசி மாவில் கால்கள் வரைகிறார்கள்.

o

சேட்டை செய்யாமல்
மீண்டும் வெளியே போய்
ஒழுங்காய் நடந்து வா என்றார்கள் குழந்தையை.
கால் தடம் அழகாய் வரவில்லையாம்.

o

முறுக்கை ஏக்கத்துடன் பார்த்தபடி,
கிருஷ்ணர் வேசத்தில் குழந்தை.
சாமி கும்பிட்ட பிறகு தான்
என்று அம்மா சொல்லி விட்டார்களாம்.
முறுக்கை ஏக்கத்துடன் பார்த்தபடி
கிருஷ்ணர் குழந்தை வேசத்தில்.

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்