Monday, August 26, 2013

வலிகளின் ருசி


துளைபட்ட மூங்கில்
அழுதுகொண்டிருந்தது
இசையென்று ரசிக்கிறார்கள் ...

சூட்டில் மெழுகுக் கூடு
உருகியது. சேர்த்து வைத்த,
உழைப்பு எல்லாம் ஒழுகியது.
திருடிய கை முழங்கை வரை இனிக்கிறதென்கிறார்கள்

மனமுடித்த மகளின் கணவனுக்கு
விருந்தென்று சொல்லி
கெடையில் ஒரு ஆட்டின் தாலி அறுக்கிறார்கள்

சுரந்த மடியை மகனுக்கு தராமல்
போன வாரம் அவன் செத்துப் போனான்...
வைக்கோல் திணித்த அவனை நீட்டுகிறார்கள்...
மகனுக்காய் மடிசுறக்கிறாள் அன்னை இன்னமும் ... விழியும் கூட...

அடுத்தவன் வலியில் தான்
பாதிபேர் வாழ்கிறான்...
அடுத்தவனுக்கு வலிக்க வைத்து வாழ்கிறான்
அடுத்தவன் வலியில் ருசி கண்டுவிட்டவன்... - காதலிக்கப்படாதவன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்