Thursday, January 30, 2014

காலி பர்சு

டிக்கெட்டின் விலை கேட்டபிறகு
அந்த இடம் நடக்கும் தூரம்
என்று நடக்கப்பழகிக்கொள்கிறேன்.

முதல் தேதி வரும் சம்பளத்தை விட
கழட்டிப் போட்ட அழுக்கு சட்டையில் கிடைக்கும்
ஐந்து ரூபாய்-க்கு துள்ளி குதிக்கிறேன்.

POS மெசினுக்குள் போன கார்டு
எளிதாய் வெளியில் வந்துவிட்டது.
காசு இருக்கிறதென ஏற்றுக்கொள்ளும்வரை
நான்  உள்ளேயே சிக்கிக் கொள்கிறேன்.

சாப்பிட போன இடத்தில்
அவன், “நீ ராம் தானா? என்ன தெரியுதா?” என்கிறான்.
அவன் பில்லும் எனக்கு வந்திடுமென்று பயந்து
தெரியாதென்று தப்பிக்கிறேன்.

உணவகத்தில் மாவு ஆட்டுவதற்கு
கிரைண்டர் இருப்பதாய் சொல்லும்
அந்த பலகைக்கு பயப்படுகிறேன்

என் கவிதைக்கு காத்திருக்கும்
தோழியை போல்
காத்துக்கொண்டிருக்கிறேன் அந்த தேதிக்கு.
குழந்தை உறங்கிய பின்னிரவில்
வீட்டுக்கு வந்துவிட்டு, விடியும் முன்பே
கிளம்பிவிடும் அப்பாவாய் ஏமாற்றி தொலைகிறது.

வெறும் கையும் பையும்
இவ்வளவு கணக்கும் என்ற
இன்று தான் தெரிந்து கொண்டேன்.
நீ காலி செய்து போன இருதயம் போலவே :( - காதலிக்கப்படாதவன் 30/31-01-2014 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்