Thursday, May 31, 2012

நீ நாசமாய் போனால் எனக்கென்ன?




நீ நாசமாய் போனால் எனக்கென்ன?

அந்த காகித சுருளுக்குள்
எந்த கருமத்தை எரித்து
நீ சம்பலானால் எனக்கென்ன
 ஆனால் உருவாகும் புகையையும்
சேர்த்து முழுங்கிவிடு
வீணாய் பூமியை மூச்சுத் திணறவிடாதே

விஷம் அருந்தியவனுக்கு ஒரு வலி என்றால்
அதை பார்த்தவனுக்கு மும்மடங்கு வலி...
எங்கள் அருகே அந்த விசத்தை உறிஞ்சாதே

பயன்படுத்தியதை போடத்தான்
எங்கள் பூமியின் குப்பைத் தொட்டிகள்
வீணாய் போனதின் சாம்பலை தட்டாதே
பூக்களைத் தூவத்தான் எங்கள் பாதைகள்
அக்கினிப் பூக்களைத் கசக்காமல் தூவ அல்ல.
உன் சட்டைப்பைக்குள் இடம் இருக்கு காலியாக...

நீ நாசமாய் போனால் எனக்கென்ன?

உன் பற்களின் பாதங்களில்
எந்த கருமத்தை போட்டு மிதித்து
நீ நசிந்து போனால் எனக்கென்ன?

நசிந்து போன இலையின்
மலத்தை சுமக்கும் எச்சிலை
எங்கள் பூமியின் கிண்ணத்தில் துப்பாதே
உன் வயிற்றுக்குள் இருக்கும்
தங்கக் கிணத்தில் சேர்த்துக்கொள்

நீ நாசமாய் போனால் எனக்கென்ன?

2 comments:

  1. அருமையான கவிதை
    அர்த்தமுள்ள கருத்து நல் சமூக நோக்கு
    அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. கவிஞரே அருமையான கவிதை

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்