Friday, June 1, 2012

தாகத்திற்கு கண்ணீர்




பாட்டி முந்தாநேத்து  ஆத்தா நேத்து 
அக்கா இன்று மனைவி நாளை
மகள் நாளை மறுநாள்
.
மருமகளாய் இவர்கள் அனுபவிதவைகளுக்கு
மாமியாரை மருந்திட விழைவதை விட 
பழிவாங்கத் துடிக்கும் இன்னொரு 
விலங்கின் பசிக்கு இரை 
ஆனவர்கள் ஆகிறவர்கள் ஆகப்போகிறவர்கள் 
.
அவ மகளோட மாமியார 
கரிச்சுக் கொட்டுவா 
அதையே மருமகளுக்கு 
இவா செய்கையில் 
அறிவை காற்றில் வீசுவா...
 .
அவா வீட்டின் ஏவல்களெல்லாம்
மிருகத்தணமாம்...
அதையே விடுமுறைக்கு வந்த நாத்தனா
அண்ணன் பொஞ்சாதி தலையில்
ஏற்றுவது என்ன குணமோ?
 .
இவா மகா மருமகன்கூட பேசுனா
சின்னஞ்சிறுசுக அப்டிதான் என்பவள்
அங்க என்ன அவன்கிட்ட பல்ல இழிகுற
வேல கிடக்கு தல மேல என்று
மருமக தல மேல ஏறுவது ஏனோ?
 .
இவோளோட வளர்ப்போடு
தினம் பாடுபடுபவளை
பிள்ளை வளர்க்கும் லட்சணம் பாரு
என்று வக்கன பேசுவா
 .
உட்காரவும் விடாம நிக்கவும் விடாம
இல்லாத கொடுமைய செஞ்சுப்புட்டு
என் மகனின் மனசக் கெடுத்து
தனிக்குடித்தனம் போறா என்று
பல்லுபோனவள்களோடு சேர்ந்து
புரணி பேசுவா
.
மகனின் பாசத்திடம்
தான் சாவதை சொல்லி மிரட்டியே
தினம் ஒருபூவை உயிரோடு சாவடிப்பா
 .
இவ மக வாரவாரம்
ஓய்வு உலா இங்க வரணும்
வரும் அவா வேலைய
மருமகா செய்யணும்...
உன் ஆத்த உன்ன கட்டிகொடுத்தாச்சு
இன்னும் அங்க உனக்கென்ன உறவென்று
சொல்லும் இவ, இவ மகள
வாடகைக்கா விட்டா வாழத்தான விட்ட
எங்கே சம உரிமை?
.
இவா மாமியா வாங்கிய
வேலையில தவிச்சுப் போனாவா
மருமக கண்ணீர் குடிச்சு இளைபாருகிறாலாம்...
அவளை பாசத்தோடு பார்...
அவள் பொழியும் அன்பு மழையிலும்
தாகம் தீரும்... அவள் உன் (மரு)மகள்
மலரை மதிக்கலனாலும் பரவாயில்லை
தயவு செய்து மிதிக்காதே

2 comments:

  1. வாழ்கையில்
    இதுவும் கடந்துபோகும்


    ''வீட்டுக்கு வீடு வாசல் படி''

    ReplyDelete
    Replies
    1. தேவை இல்லாத வாசற்படிகள் எதற்கோ?

      Delete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்