Monday, January 14, 2013

கடிக்கும் குரைக்கிற நாய்

என்னை நீங்கள்
இதற்கு முன்பு
பார்த்திருப்பீர்கள்...
எங்கேனும் நிச்சயம்
பார்த்திருப்பீர்கள்...

எங்காவது அடிபட்டு
கிடந்த உங்களை
நீதியின் அலைச்சலுக்கு
பயந்து, துடிக்க விட்டு
போய் இருந்திருப்பேன்...

உங்களை அதர்மம்
சூறையாடிய போது
என் உயிர் என்னும்
சுயநலத்தோடு கண்டு கொள்ளாமல்
நகர்ந்திருப்பேன்...

ஏன்?
உங்களை பார்த்து குரைத்த
உங்களை துன்புறுத்திய
உங்கள் காலை அசிங்கம் செய்த
அந்த நாய் நானாக கூட
இருந்திருக்கலாம்...


எங்கேனும் நிச்சயம்
என்னை பார்த்திருப்பீர்கள்

துடிக்க விட்டு போன
நான் நிச்சயம்
உங்கள் இறுதி ஊர்வலத்தில்
கண்ணீர் சிந்தி இருந்திருப்பேன்...
ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிருப்பேன்...
உங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு
மூச்சு முட்ட கத்தி இருந்திருப்பேன்...

துடிக்க உங்களை சாக விட்டுவிட்டு
நீதியை காப்பதாய் குறைப்பேன்
எங்கேனும் நிச்சயம்
என்னை பார்த்திருப்பீர்கள்



No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்