Tuesday, January 29, 2013

மேலெழும்பிய பெருவிரல்

என்னை முட்டாளாக்கிய
ஒரே புத்தகம் அது...
என் அம்மாவை
பிடிக்கும் என்பதை காட்ட
ஒரு லைக் போதுமாய் இருந்தது...
நான் என்னமோ 
முத்தமும் பாசமும் தேவை 
என்று நினைத்தேன்..
 .
என் தேசத்திற்கு 
உயிர் துறந்த வீரனை கௌரவிக்க
ஒரு லைக் போதுமாய் இருந்தது...
நான் என்னமோ 
சிலையும் மாலையும்
என் மகனுக்கு அவன் பெயருமல்லாவா
என்றல்லவா நினைத்தேன்...
.
பிடித்ததை சொல்ல
பிடிக்காததை கொல்ல
எதிர்ப்பை காட்ட
ஆதரவை நீட்ட
இன்னும் எதற்கெல்லாம்
நான் லைக் இடப் போகிறானோ?
நல்ல வேலையாக
திருமணம் செய்ய
பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ
லைக் இட்டால் போதுமென்று
கலாச்சாரம் மாறும்வரை
.
அந்த புத்தகத்தின் பூச்சியாகவே
கிடந்துவிடுகிறேன்...
அவன் மூடி நசுக்கட்டும் என்னை...
.
நம்மை பிடித்த
ஒரு வாதம் அது...
உயிரோடு பிணமாக்கும்
வாதமது...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்