Saturday, April 6, 2013

க்ஆ-த்அ-ல் – 2

 
நீ நிலா
நான் நிலா ரசிக்கும் பிள்ளை
நான் உன்னை தான் காதலிக்கிறேன்
நீ என்னை காதலிக்க
வேண்டுமென்றெல்லாம் அவசியமில்லை

o.o.o

யாரென்று தினம் கேட்கிறாயே
நீ தானென்று உனக்கு தெரியாதா?
தாய் தந்தை யாரென்றெல்லாம்
கேட்டா தெரிந்து கொண்டோம்…
என் காதல் உனக்காக வாழும்
இன்னொரு தாய் இன்னொரு தந்தை

o.o.o

நான் சொன்னால் கூட
ஆம், இல்லை இரண்டு பதில்கள்
நீ சொல்லலாம்
 
சொல்லாத வரை
தினம் நீ எதற்கோ சொல்லும்
“ஆம்” இதற்காகவென கேட்கிறதே
 
அறிவியலே!
இதயத்தில் காதுகள் இருக்கிறது

o.o.o

மூன்று ஆங்கில வார்த்தை சொல்லி
கையோடு கைகோர்த்து
பங்குனி வெயில் ரசித்து
கைப்பேசியை எச்சிலால் இம்சித்து
இப்படி இந்த பாழாய் போன
உலகத்தை போலத்தான் காதலித்தாக வேண்டுமா?

தூரத்தில் உனை பார்த்து
உள்ளுக்குள்ளே தினம் சிரித்து
நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு தாமதாமாய்
நீ அனுப்பும் அந்த பதிலை நிதம் ரசித்து 
உன் புகைப்படத்தோடு தினம் பேசி 
சிறு பிள்ளை புத்தக மயிலிறகாய் காதலை வைத்து
என்னையே தினமும் அரிசியாக்கி
வளராது என தெரிந்தும்
வளரும் வளரும் என்று காத்து கிடக்கும்
என் நிலை மாறுமா?
என் அன்பு, மயிலே உனக்கு புரியுமா…
மாறினாலும் புரியாவிடிலும் அரிசியாக நான் என்றும்

o.o.o

சொன்னால் காதல் மிட்டாய் போல
அன்றோ இல்லை என்றோ
ஒரு நாள் கசக்கலாம்…
சொல்லாத காதல் கரும்பினை போல
காய்ந்தாலும் செத்து வீழ்ந்தாலும்  இனிக்கும்

என் காதல் கரும்பு 

க்ஆ-த்அ-ல் – 1

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்