Saturday, March 9, 2013

Valentine இருதயம் – II

Image source Samantha Ruth Prabhu Official FB page
எவன் சொன்னான்
பூமிக்கு ஒரே நிலா என்று?
நீ இருப்பதை தெரிந்துகொள்ளாத
நாசாக்காரன் துரதிர்ஷ்டவசமான முட்டாள்
o.o.o
காதல்
உனக்கு தெரியாமல்
உன் வீட்டில் நடமாடும் பூனை…
களவாடும் உருட்டி விளையாடும் காயப்படுத்தும்.
o.o.o
காதல்
ஒரு காக்கா எச்சம்…
தங்கத்தாலனது…
உன் தலையில் விழுவதை
தடுக்கவும் முடியாது…
உன் தலையில்
எப்போது விழ வேண்டுமென்பதை
முடிவெடுக்கவும் முடியாது….
விழும் விழாமலும் போகும்…
விழுந்தால் பத்திரப்படுத்திக்கொள்…
விழவில்லையென தேடி திரியாதே…
அது காக்கா எச்சம்…
o.o.o
ஒரு குழந்தையிடம்
ஏன் உன் அம்மாவை பிடிக்கும்?
என்று கேட்பது போலத்தான்…
ஏன் காதலிக்கிறாய்?
இதயம் உடைத்தவளை(னை)
இன்னும் என் இதயத்தில் சுமக்கிறாய்…
என்று நச்சரிக்கும் கேள்விகள்…
எந்த ஒரு வார்த்தைகளும்
அந்த பதிலை விவரித்திட முடியாது…
அந்த குழந்தை “புடிக்கும்” என்றுதான் சொல்லும் அவ்வளவு தான்…
o.o.o
உடைபடாமலே கிடந்தால்
அழுகி பாழாகும்…
தேங்காயும் இருதயமும்…
காதல் ஒன்றும் உங்களை
கொன்றுவிடாது…
நீங்கள் அதை கொன்றுவிடாதீர்…
o.o.o
காதலும் கடவுளும் ஒன்று
அவர்கள் கொலை செய்வதில்லை…
ஆனால் அவர்களின் பெயரில் கொலைகள் நடக்கிறது…


1 comment:

  1. Udaiyamale kidanthaal azhugi paazhagum.. thengayum iruthayamum..
    nice lines :)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்