Tuesday, May 28, 2013

என்னை மன்னிப்பாயா?

மன்மத கணை
பூ கணை என்று நினைத்துதான்
உன் மீது எய்தேன்…
கணை உன் இருதயம் காயபடுத்தும்,
தெரியாமல் இருந்துவிட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

0

தேன்கூடாகத்தான்
நம் காதலை
இதயத்தில் கட்டினேன்…
என் இம்சை தேனீ.
கொட்டும் என்பதை மறந்துவிட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

0

ரோஜாக்கள் என்றெண்ணி தான்
என் கவிதையை
உன் பாதையில் கொட்டினேன்.
என் பேனா முட்கள்.
குத்தும் என்பதை மறந்துவிட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

0

நீ ரசிக்க, ரசித்து சிரிக்க
காத்தாடியாக உன் வானத்தில்
பறந்து வந்தேன்…
மாஞ்சா கயிறு கழுத்தறுக்குமென்று
நினைக்கவில்லை.
என்னை மன்னிப்பாயா?

0

நீ இன்னொரு வானத்து நிலா
நான் நிலா ரசிக்கும்
பிள்ளையாய் பிறந்து(தொலைந்து)விட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்