Tuesday, October 23, 2012

ஆடடே ஆச்சரியக்குறி - 1

வேடிக்கை பார்க்க போன என்னை
தாவி பாய்ந்து கவ்வி கொண்டு
காதலின் குளம் புகுந்தது
அவள் விழி மீன்கள்

=O=O=

அவள் முக்குத்தி கலங்கரை விளக்கம்
அனால் அதை பார்த்த பிறகு தான்
அடிக்கடி இருதயக்கப்பல் கரைதட்டுது

=O=O=

துணிக் கடை நுழைந்த
பெண்ணை ஒரே ஒரு உடை
தேர்ந்தெடுக்க சொல்வதுதான்
பெண்ணிற்கு கடினமான சவால்...

இரண்டு உடை காட்டி
எது எனக்கு அழகு என்று
அவள் கேட்பது தான்
ஆணுக்கு  கடினமான கேள்வி...

=O=O=

எனது மின்னஞ்சல்களுக்கும்
எந்தவொரு   குருஞ்செய்திக்கும்
நீ பதில் அனுப்பும் பொழுதை விட
அனுப்பாத போதுதான் அதிகம் மகிழ்கிறேன்

என்  மனம் விரும்பிய பதில்களை
நானே நிரப்பிக் கொள்ளலாமல்லவா!

=O=O=

உன்னை நினைக்க
தொடங்கிய  பிறகுதான்
ஒரு நாளுக்கு 24மணிநேரம்
போதாமல் தவிக்கிறேன்...

பின்குறிப்பு - கற்பனை காதல் போதையாகையில் காதல் கொண்டவர்கள் மீது பொறாமை அதிகமாகிறது.

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்