Tuesday, October 30, 2012

இன்று பிறந்த நான்(ள்)

முதல் வாழ்த்து யாருடையது
என்ற  அந்த நட்பின் போட்டியில்
என் தூக்கமே வென்றது...

=O=O=

இன்று ஒரு நாள் மட்டும்
உறக்கத்தின் தொந்தரவுகளும்
12 மணி தொன தொன பேச்சுகளும்
சுகமாய்  இருந்தது

=O=O=


தொழில்நுட்ப  வளர்ச்சி
தொப்புள் கோடி கூட
வயர்லெஸ் ஆகிப் போனது
தொலைபேசியில் வாழ்த்துகிறாள் அன்னை

நட்பு நாகரிகம் ஆகிப்போனது
தானியங்கி மென்பொருள்
வாழ்த்து செய்தி அனுப்புகிறது
நண்பனின் பெயரில்

=O=O=

கடனே அனுப்பிவைக்கும் 
happy birthday நண்பர்கள் ஏனோ  

"ஊர் தாதாவை
மர்ம  நபர் கொலை செய்துவிட்டால்
மகனிடம் துட்டி கேட்க வரும்
நண்பர்களை விட
நான் செய்யவில்லை என்று சொல்லி
அவனது பழி தப்பிக்கும்
பழைய  பகைவர்களை"
நியாபகபடுத்துவதை தடுக்க முடியவில்லை

=O=O=

எந்த கடையிலும் என் அன்னையின்
பாசம் கிடைக்கவில்லை
என்  எந்த சம்பாத்தியமும்
அதை வாங்க போதவில்லை ...
அவளும் நானும் தூர ...
ஆனால் அவள் பாசம் மட்டும்
என்றும் மாறா!!!

வாங்கிய லெவிஸ் ஜீன்சிலும்
பேசிக்ஸ் டீ சர்ட்டிலும்
எனக்காக உழைக்க உறங்காத
இவர்களின் இரவுகளின் சாயம் இருந்தது

=O=O=

பழைய மருந்துகள்
காய்ந்த பற்பசைகள்
தேங்காய் எண்ணெய்கள்
முகப் பவுடர்கள் வீசிய முட்டைகள்
10 நாள் காபி பேனா மை
என்று எதுவுமே கலந்து
என் மீது ஊற்றபடாத போது

ஆறு முறை குளித்து வந்து
ஏழாவது  முறை மீண்டும் அழுக்காகி
இரவு 12 மணிக்கு எட்டாவது குளியல்
நான் குளிக்காதபோது

23 வயதில்
முதுமை தட்டியது உணர்கிறேன்...

=O=O=

காதல் கலந்து அவளது
வாழ்த்து  வரும் என்று
போன வருடம் காத்திருந்தது
நியாபகம் வந்தது

இன்னமும் காத்திருகிறேன்...
நிறுத்த முடியவில்லை

=O=O=

எதிர்காலத்தில்
எதோ ஒரு வகுப்பு மாணவன்
"ராமானுஜமென்பவர் 1989 ஆம் ஆண்டு
சோலைமலை யோகமலர் தம்பதிக்கு
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் பிறந்தார்"
என்றென்னை படிப்பான் என்று சொல்லிக்கொண்டேன்

ஆனால் அதற்கான
எந்த  ஒரு முயற்சியும் இல்லாமலே
23 ஆண்டுகளை வீணாக்கியது
இன்று சுடுகிறது ...


1 comment:

  1. நல்ல பிறந்த நாள் கவிதை
    என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    --

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்