Thursday, October 18, 2012

மழையின் மழலை

மேகக் குழந்தை
கால் இடறி விழுகிறாள்
இங்கே ஊரே சிரிக்குது

O~O~O

மனிதன் எவ்வளவு
மனிதனை தொலைத்துவிட்டான்
என்பதை தூறலுக்கு விரிகிற
குடைகளை எண்ணிப் பாருங்கள்

O~O~O

மழை வேளையில்
மறுநாள் காளானுக்கு முந்த
திட்டமிடுகையில்  அட்ரீனலின் சுரப்பெடுக்கும்
அம்மாவின் வதக்கிய காளான் நினைக்கையில்
எச்சிலோடு தேனூறும்
இன்றெல்லாம் நாளையின் சாலை நிலைமை
நினைத்தே வயிற்றில் புளி கரையும்

O~O~O

சிமெண்ட் காடுகளில்
துணியாலான குடை காளான்
இன்றைய மழை காலம்

O~O~O

சிறை கம்பி பின்னால் மகனை
பார்க்கும் தாயவள் ஏக்கமாய்
வெப் காமீரா வழியே காத(லனை)லியை
பார்க்கும் காதலின் வலியாய்
அதோ அந்த கட்டிடத்தின்
சன்னல் கண்ணாடியில் மோதி வழிகிறது
கணினி முன் சிறை இருக்கும்
அவர்களை பார்த்து அழுகையாக

O~O~O

எவராவது கவனித்ததுண்டா?
விவசாயி விசித்திர மனிதன்...
அவன் கண்ணீர் வறண்டிருக்கும்
புன்னகையில் தான் ஈரப்பதமிருக்கும்
மழையாய் சிரிப்பான் அவன்

O~O~O

குடைகளை மடக்கிவிட்டு
ஒரு முறை மழையினில்
நடந்து பாருங்கள் ...
இன்னொரு முறை
மனிதனாய் பிறக்க ஆசை படுவீர்

மழையை பற்றி  - 1

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்