Friday, April 19, 2013

முடிவிலியின் தாகம்

கொன்று கொய்து கொண்டையில்
கொண்டிடும் கைக்கு மத்தியில்
கண்டு ரசித்திடும் இதயம்
இருந்தும் அந்த ரோஜா
கிள்ளி கொய்யும் கைக்கே சொந்தமாம்
.
o.o.o
.
கண்ணாடி தன் முன்னின்றவன்
பிம்பம் கொள்கிறது…
பிம்பத்தின் சொந்தகாரனுக்கு பிடிக்காமல்
கல்லெடுத்து அடிக்கிறான்…உடைந்த கண்ணாடியோ
இரண்டு பிம்பம் கொண்டு நகைக்கிறது
சில்லு சில்லாய் நொறுங்கியும்
கண்ணாடி தான் களவாடிய பிம்பம் தரவே இல்லை
தோற்று போய் நகருகிறான்… கண்ணாடியும் தோற்று போகிறது
சில சமயம் இருவரின் தோல்வி தான்
பெரும் தீர்வாகும் … தீர்ப்பாகும்
.
o.o.o
.
மீண்டிட நினைத்து
திறந்த சிறைக்கதவோ
மீண்டும் சிறை கூட்டி செல்லுகிற வாசல்…
தெரிந்தா திறந்தேன்… தெரிந்தே நுழைந்தேன்…
மீண்டிட நினைத்தேன்…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்